2025-26 நிதியாண்டில் 1.5 மெட்ரிக் டன் சர்க்கரை ஏற்றுமதிக்கு அனுமதி: மத்திய அரசு

2025-26 நிதியாண்டில் 1.5 மெட்ரிக் டன் சர்க்கரை ஏற்றுமதிக்கு அனுமதி: மத்திய அரசு



புதுதில்லி: அக்டோபர் மாதம் தொடங்கிய 2025-26 பருவத்திற்கு பிறகு 1.5 மில்லியன் டன் சர்க்கரை ஏற்றுமதியை அனுமதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது என்றார் உணவு அமைச்சர் பிரகலாத் ஜோஷி.


கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு நவம்பர் 7 தேதியிட்ட கடிதத்தில், மொலாசஸ் மீதான 50 சதவிகித ஏற்றுமதி வரியை நீக்கவும் மத்திய உணவு அமைச்சகம் முடிவு செய்துள்ளது என்றார். நாட்டில் கரும்பு விவசாயிகளின் நலனைப் பாதுகாக்க மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.


நடப்பு 2025-26 ஆம் ஆண்டு 15 லட்சம் டன் சர்க்கரை ஏற்றுமதியை அனுமதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ள நிலையில் மொலாசஸ் மீதான 50 சதவிகித ஏற்றுமதி வரி நீக்கப்பட்டுள்ளது என்றார் ஜோஷி. இது ஏற்றுமதி ஒதுக்கீடு தொழில்துறை கோரிய 2 மெட்ரிக் டன்னை விட குறைவு.


செப்டம்பர் வரை முடிவடைந்த 2024-25 பருவத்தில் 1 மெட்ரிக் டன் ஒதுக்கீட்டில் இந்தியா சுமார் 8,00,000 டன் சர்க்கரையை ஏற்றுமதி செய்துள்ளது.


2025-26 ஆம் ஆண்டிற்கான சர்க்கரை உற்பத்தி, உள்நாட்டு ஆண்டு தேவை 28.5 மெட்ரிக் டன்னாக இருக்கும் நிலையில், உற்பத்தி 34 மெட்ரிக் டன்னை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றார் உணவு செயலாளர் சோப்ரா.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%