ஏழரை சனியை விரட்டும்* *ஆஞ்சநேயர் வழிபாடு

ஏழரை சனியை விரட்டும்*  *ஆஞ்சநேயர் வழிபாடு

*🙏🕉️ஸ்ரீ ராமஜெயம் 🕉️🙏*


*🙏🕉️ஜெய் ஸ்ரீ ராம் 🕉️🙏*


*🙏🕉️🤲ஏழரை சனியை விரட்டும்*

*ஆஞ்சநேயர் வழிபாடு:🤲🕉️🙏*


  *🙏🤲🙇‍♂️ஆஞ்சநேயர் மூலம் நட்சத்திரத்தில் தோன்றியவர் ஒருசமயம் சனி பகவான் ஆஞ்சநேயரைப் பிடிக்க வந்தார்.*


*🙏ஆஞ்நேயர் பொதுவாக தினமும் தோட்டத்தில் மலர்ந்த பூக்களைப் பறித்து ராமரை வழிபட்டு பாடல்களைத் தன்னை மறந்து பாடிக் கொண்டிருப்பார்.....*


*🙏அன்று தன்னைப் பிடிக்க சனீஸ்வரர் வாசலில் காத்துக் கொண்டிருப்பதைத் தெரிந்து கொண்டார் ஆஞ்நேயர்.*


*🙏சனி பகவான் அவர் கடமையைச்* *செய்ய வந்துள்ளார்*

*செய்யட்டும்....* *நான் எனது கடடையைச்* *செய்கிறேன் என்று*

*நினைத்தபடியே* *இருந்தார்......*


 *🙏மாளிகையை விட்டு வெளியில் செல்லும் போது தனது வாலின் நுனியை மட்டும் நீட்டினார்.....*


*🙏வெளியில் காத்துக் கொண்டிருந்த சனி பகவான்* *ஆஞ்சநேயரின் வாலைக் கண்டதும் அவரது வாலில் ஏறி* *அமர்ந்து இறுக்கிப்*

*பிடித்து* *கொண்டார்..*


*🙏சனி பகவானை விரட்டுவது எப்படி என சிறிது நேரம் யோசித்தார் ஆஞ்சநேயர்.*


*🙏ராமபிரானைத் துதிக்கும் போது துள்ளிக் குதித்துக் கொண்டே வழிபட வேண்டும் என முடிவு எடுத்தார்.*


*🙏அதன் படியே ஆஞ்சநேயர் குதிக்கத் தொடங்கினார்.*


*🙏இதனால் வாலின் நுனியில் இருந்த சனி பகவானுக்கு உடல் வலி எடுத்தது.*


*🙏ஆஞ்சநேயர் குதிப்பதை நிறுத்திவிட மாட்டாரா என யோசித்த சனி* *பகவான் உடல் வலி அதிகமாகவே*

*ஆஞ்சநேயரிடம் எப்போது குதிப்பதை நிறுத்து வாய்? என்று கேட்டார்....*


*இதைக்கேட்டதும்*

*சனி பகவானே*

*ஏழரை வருஷத் திற்கு துள்ளிக்* *குதித்துக் கொண்டே தான் இருப்பேன்*

*என்றார்.....சனி பகவான் பயந்து போனார்...*


*இனிமேலும் ஆஞ்நேயரைப் பிடித்துக் கொண்டிருப்பதால்*

*நமக்கு எந்தப்பயனும் இல்லை என யோசித்த சனி பகவான்*

*ஆஞ்சநேயரை விட்டு விலகி விட முடிவு செய்தார் ...*


*அதன்படி ஆஞ்சநேயரிடம் சொல்லிவிட்டு வெளியேறினார் சனி பகவான்....*


*ஆஞ்சநேயரும் மிகவும் மகிழ்ந்து சனி பகவானிடம் வேண்டுகொள் விடுத்தார்.....*


*🙏சனீஸ்வரா என்னை விட்டு விலகியது போல் ஏழரை ஆண்டு சனி பிடிக்கும் போது*

*உன்னிடமிருந்து விலக வேண்டும்* *என நினைத்து என்னை வழிபடும்*

*என் பக்தர்களுக்கு எந்தத் தொந்தரவையும்* *சங்கடத்தையும் நீ கொடுக்கக்கூடாது*

*எனக் கேட்டுக் கொண்டார்......*


*சனி பகவான் சம்மதித்தார்*


*எனவே ஏழரை சனி அஷ்டம சனியின் போது நமது துயரங்கள் விலக* *ஆஞ்சநேயரை வழிபட்டால்*

*பக்தர்கள் சனி பகவானிடமிருந்து*

*விடை பெறுவதற்கு ஆஞ்சநேயர் துணைபுரிவார்...💐🌷🌹🤲👣🙇‍♂️🕉️🙏*



  *🙏🕉️🤲வழிபடுங்கள் மனமார 🤲பிராத்தனை செய்யுங்கள்* *இராமதூதனை...💐🌷🌹🤲👣🙇‍♂️🕉️🙏🙏*


*🙏🕉️ஜெய் ஸ்ரீ ராம் 🕉️🙏*

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%