அறுசுவை உண்டி குறுக்கி
ஐவர் மயக்கமுற
ஐவரோடு உறவு அறுத்து
நால்வரை வாகை சூட
மும்மலங்கள் நீங்குமே!
முத்திரிகளை ஒன்றாய் திரிக்க;
ஓங்கும் ஒண்சுடரை
ஆக்ஞாவில் ஏற்ற
நாதசம்மியத்தின் ஜதியுடன்
இரு நடன காட்சி காணும் கணத்தில்:
ஆயிரமிதழோடு தாமரை மலர;
அமிர்த தாரை
தானே பொங்கி வழிய
போவதும் வருவதுமின்றி
ஓரிடமென இறையில் புகுந்திருப்பன்;
அவனைச்
சித்தனென்றும் இயம்பலாம்!
பித்தனென்றும்
பகரலாம்!
கேட்பதற்கு அவன் இல்லை; இங்கே!
சசிகலா விஸ்வநாதன்
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%