வாசமில்லா மனிதர்கள் ...

வாசமில்லா மனிதர்கள் ...


பூக்கள்

பேசுவதில்லை

ஆனாலும்

தன் வண்ணம்

வாசம் மற்றும்

மென்மையை கலந்து

மேடையை

அலங்கரிக்கிறது


மேடைகளையும்

ஆடைகளையும்

மாற்றி மாற்றி

அலங்காரமாக

பூ மாலை

சூட்டிக்கொண்டு

பேசத்தெரிந்த

மனிதனின்

வார்த்தையில்

பூவை போல்

வாசமில்லை...


கவிஞர் பாலசந்தர் மண்ணச்சநல்லூர்

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%