வாழ்வில் தெரிந்துகொள்ள வேண்டியன*

வாழ்வில் தெரிந்துகொள்ள வேண்டியன*

*👌👌வாழ்வில் தெரிந்துகொள்ள வேண்டியன*


சில காயங்கள் " *மருந்தால்* " சரியாகும். 

சில காயங்கள் " *மறந்தால்* " சரியாகும்.


" *ஆடம்பரம்* " அழிவைத்தரும். " *ஆரோக்கியம்* " நல்வாழ்க்கை தரும். 


கார் இருந்தால் " *ஆடம்பரமாக* " வாழலாம்

மிதி வண்டி இருந்தால் " *ஆரோக்கியமாக* " வாழலாம்.


" *வறுமை* " வந்தால் வாடக்கூடாது. 

" *வசதி* " வந்தால் ஆடக்கூடாது.


 *வீரன்* சாவதே இல்லை. 

" *கோழை* " வாழ்வதே இல்லை.


தவறான பாதையில் " *வேகமாக* " செல்வதைவிட. 


சரியான பாதையில் " *மெதுவாக* " செல்லுங்கள்.


மனிதனுக்கு ABCD " *தெரியும்* " ஆனா *"Q"* ல போகத் "தெரியாது".


எறும்புகளுக்கு ABCD " *தெரியாது* " ஆனா *"Q"* ல போகத் "தெரியும்".


ஆயிரம் பேரைக்கூட " *எதிர்த்து* " நில். 

ஒருவரையும் " *எதிர்பார்த்து* " நிற்காதே.


தேவைக்காக கடன் " *வாங்கு* ". 

கிடைக்கிறதே என்பதற்காக " *வாங்காதே* ".


உண்மை எப்போதும் " *சுருக்கமாக* " பேசப்படுகிறது. 


பொய் எப்போதும் " *விரிவாக* " பேசப்படுகிறது.


" *கருப்பு* " மனிதனின் இரத்தமும் சிவப்புதான். 


" *சிவப்பு* " மனிதனின் நிழலும் கருப்புதான். 


 *வண்ணங்களில்* " இல்லை வாழ்க்கை. 

மனித " *எண்ணங்களில்* " உள்ளது வாழ்க்கை


" *கடினமாய்* " உழைத்தவர்கள் முன்னேறவில்லை. 


" *கவனமாய்* " உழைத்தவர்கள் முன்னேறியுள்ளனர்.


வியர்வை துளிகள் " *உப்பாக* " இருக்கலாம். ஆனால், 


அவை வாழ்க்கையை " *இனிப்பாக* " மாற்றும்.


*கடனாக* இருந்தாலும்சரி,

" *அன்பாக* " இருந்தாலும் சரி, திருப்பி செலுத்தினால்தான் மதிப்பு. 


" *செலவு* " போக மீதியை சேமிக்காதே. 

" *சேமிப்பு* " போக மீதியை செலவுசெய்.


உன்னை நீ செதுக்கி கொண்டே இரு " *வெற்றி* " பெற்றால் சிலை, " *தோல்வி* " அடைந்தால் சிற்பி.


 உறவினர்களில் யார் முக்கியம் என்பதை " *உயிரற்ற* " பணமே முடிவு செய்கிறது.


கடன் கொடுத்துப்பார் நீ எவ்வளவு " *முட்டாள்* " என்று தெரியும். 


கடன் கேட்டுப்பார் அடுத்தவன் எவ்வளவு

" *புத்திசாலி* " என்பது புரியும். 


பணம் கொடுத்துப்பார் உறவுகள் உன்னை " *போற்றும்* ".


கொடுத்த பணத்தை திரும்ப கேட்டுப்பார் மண்ணை வாரி

" *தூற்றும்* ".


பேசிப்பேசியே நம்மை ஏமாற்றுகிறார்கள் என்பதெல்லாம் " *பொய்* ". 


அவர்கள் பேச்சில் நாம் ஏமாந்து விடுகிறோம் என்பதே " *உண்மை* ".


மனைவி கேட்பதை எல்லாம் வாங்கி கொடுத்து சமாளிப்பவன் " *புத்திசாலி* ".


வாங்கி கொடுக்கிறேன் என்று சொல்லியே சமாளிப்பவன் " *திறமைசாலி* ".


 கவலைகள் கற்பனையானவை.

" *மீதி* " தற்காலிகமானவை.


குறைகளை " *தன்னிடம்* " தேடுபவன் தெளிவடைகிறான். 


குறைகளை " *பிறரிடம்* " தேடுபவன் களங்கப்படுகிறான்.


அறுந்து போன செருப்புக்கு வீட்டில் ஒரு இடம் " *உண்டு* ".

இறந்து போன மனித உடலுக்கு வீட்டில் ஒரு இடமும் " *இல்லை* "

விழுதல் என்பது " *வேதனை* ". 

விழுந்த இடத்தில் மீண்டும் எழுதல் என்பது " *~சாதனை*~ "


*ஆனந்தமே ஆரோக்கியம்!*


( படித்ததில் பிடித்தது)

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%