லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு பதிவு: அண்ணா பல்கலை. அதிகாரிகள் 10 பேரை இடைநீக்கம் செய்ய நடவடிக்கை

லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு பதிவு: அண்ணா பல்கலை. அதிகாரிகள் 10 பேரை இடைநீக்கம் செய்ய நடவடிக்கை



சென்னை: தனி​யார் பொறி​யியல் கல்​லூரி​களுக்கு முறை​கே​டாக அங்​கீ​காரம் வழங்​கப்​பட்​டது தொடர்​பாக லஞ்ச ஒழிப்​புத் துறை வழக்கு பதிவு செய்​துள்ள நிலை​யில், அண்ணா பல்​கலைக்​கழக முன்​னாள் பதி​வாளர் உள்​ளிட்ட 10 அதி​காரி​கள் விரை​வில் இடைநீக்​கம் செய்​யப்பட உள்​ள​தாக தகவல் வெளி​யாகி​யுள்​ளது.


மாநில அரசின் தொழில்​நுட்ப பல்​கலைக்​கழக​மான அண்ணா பல்​கலைக்​கழகத்​தின் இணைப்பு அங்​கீ​காரம் பெற்று தமிழகத்​தில் 470-க்​கும் மேற்​பட்ட தனி​யார் சுயநிதி பொறி​யியல் கல்​லூரி​கள் இயங்கி வரு​கின்​றன.


இந்த நிலை​யில், தனி​யார் பொறி​யியல் கல்​லூரி​களுக்கு விதி​முறை​களை மீறி முறை​கே​டாக இணைப்பு அங்​கீ​காரம் வழங்கப்பட்டது தொடர்​பாக அண்ணா பல்​கலைக்​கழக முன்​னாள் பதி​வாளர் ஜெ.பிர​காஷ், இணைப்பு அங்​கீ​காரப் பிரிவு துணை இயக்​குநர் இளை​யபெரு​மாள் உட்பட 10 பேர் மீது தமிழக லஞ்ச ஒழிப்​புத் துறை வழக்கு பதிவு செய்​துள்​ளது.


பொது​வாக, பதி​வாளர், துணை இயக்​குநர் உள்​ளிட்ட நிர்​வாகப் பொறுப்​பு​களில் இருப்​பவர்​கள் மூத்த பேராசிரியர்​களாக இருப்​பார்​கள். அரசு ஊழியர் நடத்தை விதி​முறை​களின்​படி, ஓர் அரசு ஊழியர் மீது குற்​ற​வியல் வழக்கு பதிவு செய்​யப்​பட்​டால், அவர் உடனடி​யாக பணி​யில் இருந்து இடைநீக்​கம் செய்யப்படுவார்.


அந்த வகை​யில், தற்​போது அண்ணா பல்​கலைக்​கழக அதி​காரி​கள் 10 பேர் மீது லஞ்ச ஒழிப்​புத் துறை வழக்கு பதிவு செய்துள்ளதால், அவர்​களை இடைநீக்​கம் செய்ய பல்​கலைக்​கழக நிர்​வாகம் முடிவு செய்​துள்​ளது.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News