லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு பதிவு: அண்ணா பல்கலை. அதிகாரிகள் 10 பேரை இடைநீக்கம் செய்ய நடவடிக்கை
சென்னை: தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கு முறைகேடாக அங்கீகாரம் வழங்கப்பட்டது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு பதிவு செய்துள்ள நிலையில், அண்ணா பல்கலைக்கழக முன்னாள் பதிவாளர் உள்ளிட்ட 10 அதிகாரிகள் விரைவில் இடைநீக்கம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மாநில அரசின் தொழில்நுட்ப பல்கலைக்கழகமான அண்ணா பல்கலைக்கழகத்தின் இணைப்பு அங்கீகாரம் பெற்று தமிழகத்தில் 470-க்கும் மேற்பட்ட தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன.
இந்த நிலையில், தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கு விதிமுறைகளை மீறி முறைகேடாக இணைப்பு அங்கீகாரம் வழங்கப்பட்டது தொடர்பாக அண்ணா பல்கலைக்கழக முன்னாள் பதிவாளர் ஜெ.பிரகாஷ், இணைப்பு அங்கீகாரப் பிரிவு துணை இயக்குநர் இளையபெருமாள் உட்பட 10 பேர் மீது தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு பதிவு செய்துள்ளது.
பொதுவாக, பதிவாளர், துணை இயக்குநர் உள்ளிட்ட நிர்வாகப் பொறுப்புகளில் இருப்பவர்கள் மூத்த பேராசிரியர்களாக இருப்பார்கள். அரசு ஊழியர் நடத்தை விதிமுறைகளின்படி, ஓர் அரசு ஊழியர் மீது குற்றவியல் வழக்கு பதிவு செய்யப்பட்டால், அவர் உடனடியாக பணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்படுவார்.
அந்த வகையில், தற்போது அண்ணா பல்கலைக்கழக அதிகாரிகள் 10 பேர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு பதிவு செய்துள்ளதால், அவர்களை இடைநீக்கம் செய்ய பல்கலைக்கழக நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?