திமுக ஆட்சிக்கு ராமதாஸ் பாராட்டு

திமுக ஆட்சிக்கு ராமதாஸ் பாராட்டு


திண்டிவனம்: பாமக நிறுவனர் மருத்துவர் ச.ராமதாஸ், அவரது மகன் அன்புமணி இடையே கருத்து மோதல் ஏற்பட்டு உள்ள நிலையில், இருவரும் கட்சி தங்கள் கட்டுப்பாட்டில் இருப்பதாக கூறிவருகின்றனர். இதனிடையே, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்த அன்புமணி, அதிமுக - பாஜக கூட்டணியில் இணைவதாக தெரிவித்தார். ஆனால், “பாமக நிறுவனர் நான்தான். நான் எடுக்கும் முடிவே செல்லும். அன்புமணி கூட்டணி வைத்தது செல்லாது” என்று ராம தாஸ் அறிவித்தார். இந்நிலையில், பாமகவில் விருப்ப மனு வழங்கும் பணியை திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் ராமதாஸ் தொடங்கி வைத்தார். அவருடைய மகளும், செயல் தலை வருமான காந்திமதி தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தார். அதன்பின்னர், ராமதாஸ் செய்தியாளர்களிடம் கூறும் போது, “பாமகவில் இரு அணிகள் கிடையாது. என் தலைமை யிலான அணிதான் பாமக. வரவிருக்கும் தேர்தலில் நாங்கள் விரும்பிய வெற்றியை பெறுவோம். முதல்வர் மு.க.ஸ்டா லின் தலைமையிலான திமுக ஆட்சி நன்றாகத்தான் இருக்கிறது. பாமக செயல் தலைவர் காந்திமதி சட்டசபை தேர்தலில் போட்டியிடுவார்” என்றார். தொடர்ந்து நிருபர்கள் அவரிடம், “திருமாவளவன் இருக்கும் கூட்டணியில் நீங்கள் இணைய வாய்ப்பு இருக் கிறதா?” என்று கேட்ட கேள்விக்கு, “அரசியலில் எது வேண்டு மானாலும் நடக்கலாம். எதிர்பாராதவிதமாக எல்லாமே நடக்கும். எதுவுமே நடக்காது என்று சொல்ல முடியாது” என்றார்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%