3 ஒருநாள் மற்றும் 5 டி-20 போட்டிகளில் விளை யாட நியூஸிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த சுற்றுப் பயணத்தின் தொடக்க நிகழ்வான முதல் ஒருநாள் போட்டி ஜன., 11 அன்று குஜராத் மாநிலம் வதோரா வில் நடைபெற உள்ளது. இந்தப் போட்டிக்கான நியூஸி லாந்து அணியில் இடம்பெற்றுள்ள சுழற்பந்து வீச்சாளர் ஆதித்யா அசோக் தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்ட வர். வேலூரில் பிறந்த அவருக்கு 4 வயதாக இருக்கும் போது அவரது குடும்பம் நியூஸிலாந்து நாட்டிற்கு இடம்பெயர்ந்தது. அவரது உறவினர் கள் வேலூரில் தான் வசித்து வரு கிறார்கள். கடந்த ஆண்டு சென்னைக்கு வந்து சிஎஸ்கே (ஐபிஎல் சென்னை அணிக்கு சொந்தமானது) அகாடமியில் சில வாரங்கள் பயிற்சி யில் ஈடுபட்ட அவர் ஒருநாள் தொட ரில் சாதிக்க ஆர்வமுடன் உள்ளார். இந்தியா வந்த பின்பு செய்தியாளர் களிடம் பேசிய ஆதித்யா அசோக், “அதிர்ஷ்டவசமாக சென்னைக்கு வந்து பயிற்சி எடுக்க வாய்ப்பு கிடைத்தது. அதற்காக நியூஸிலாந்து கிரிக்கெட் வாரியத்துக்கு நன்றி கடன்பட்டுள்ளேன். இந்த பயிற்சியின் மூலம் நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டேன். குறிப்பாக இங்குள்ள கரிசல் மண், செம்மண் போன்ற ஆடுகளங்களில் எப்படி பந்து வீசுவது என்பதை அறிந்து கொண்டேன். அந்த அனுபவம் ஒருநாள் தொடரில் மிகவும் உதவிகர மாக இருக்கும் என்று நம்புகிறேன்” என அவர் கூறினார். ரஜினி ரசிகர் 23 வயதான ஆதித்யா அசோக் இதுவரை 2 ஒருநாள் மற்றும் ஒரு டி-20 போட்டியில் விளையாடியுள்ளார். அவர் தமிழ் சினிமாவில் பிரபலமான ‘என் வழி தனி வழி’ (படையப்பா திரைப்படம் - ரஜினி) என்ற வசனத்தை கையில் பச்சை குத்தி யிருப்பதும் கவனிக்கத்தக்கது.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?