சென்னையில் தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும்: மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் புகார்

சென்னை:
சென்னையில் தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும் என்று மாநகராட்சி மன்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள் புகார் தெரிவித்துள்ளனர். சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டம் மேயர் ஆர்.பிரியா தலைமையில், துணை மேயர் மு.மகேஷ்குமார், ஆணையர் ஜெ.குமரகுருபரன் ஆகியோர் முன்னிலையில் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற திமுக கவுன்சிலர்கள் `ஓரணியில் தமிழ்நாடு' என்ற பேட்ஜ் அணிந்து வந்திருந்தனர்.
கூட்டத்தில் பேசிய கவுன்சிலர்கள் பலர், ``சென்னை மாநகராட்சியில் உள்ள சாலைகளில் தெருநாய்களின் தொல்லை அதிகரித்து வருகிறது. ரிப்பன் மாளிகை வளாகத்திலேயே ஏராளமான நாய்கள் உள்ளன. இவை பொதுமக்களுக்கு பெரிய அச்சுறுத்தலாக உள்ளன.
அவற்றைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று தெரிவித்தனர். இதற்கு பதில் அளித்த மேயர், ``சென்னை சாலைகளில் சுற்றும் தெரு நாய்களை பிடித்து, இனக்கட்டுப்பாடு செய்து வருகிறோம். ஒரு நாளில் 85 நாய்களுக்குதான் இனக்கட்டுப்பாடு செய்ய முடியும்.
அவற்றுக்கு வெறி நோய் தடுப்பூசியும் போடப்படுகிறது. இனக்கட்டுப்பாடு செய்த பிறகு, அவற்றுக்கு மைக்ரோ சிப் பொருத்தி கண்காணிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்'' என்றார். தொடர்ந்து பேசிய கவுன்சிலர்கள், ``தெரு நாய்களைப் பிடித்து இனக்கட்டுப்பாடு செய்வது மட்டும் தீர்வாகாது'' என்றனர்.
பின்னர் இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: மாநகராட்சி கவுன்சிலர்கள் 200 பேர் ரூ.4 லட்சம் செலவில் முழு உடல் பரிசோதனை செய்துகொள்ள மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா நிர்வாக அனுமதி அளித்ததற்கு மாமன்றக் கூட்டத்தில் ஒப்புதல் அளித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?