news Breaking News
clock

கொடைக்கானல் அன்னை தெரசா பல்கலை.யில் மாணவிகளுக்கு பட்டம் - ஆளுநர் ரவி வழங்கினார்!

கொடைக்கானல் அன்னை தெரசா பல்கலை.யில் மாணவிகளுக்கு பட்டம் - ஆளுநர் ரவி வழங்கினார்!



கொடைக்கானல்: அன்னை தெரசா பல்கலை.யில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவின்போது தமிழக ஆளுநர் ரவி மாணவிகளுக்கு பட்டம் வழங்கினார்.


கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில் வியாழக்கிழமை (நவ.6) காலை நடைபெற்ற விழாவில் மாணவிகளுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பட்டங்களை வழங்கி பாராட்டினார். கொடைக்கானல் அருகே அட்டுவம்பட்டியில் உள்ள அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில் 32-வது பட்டமளிப்பு விழா வியாழக்கிழமை (நவ.6) காலை 10.30 மணிக்கு நடைபெற்றது. துணை வேந்தர் கே.கலா வரவேற்றார்.


பல்கலைக்கழக வேந்தரும், தமிழக ஆளுநருமான ஆர்.என்.ரவி, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஒடிசா பெர்ஹாம்பூர் பல்கலைக்கழக துணை வேந்தர் கீதாஞ்சலி பேசியதாவது: அன்னை தெரசாவின் கூற்றுப்படி, கல்வியின் சாராம்சம் அறிவின் குவிப்பாக மட்டுமல்ல, இரக்கம், பணிவு மற்றும் சேவையை வாழ்நாள் முழுவதும் கடைபிடிக்க வேண்டும்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News