2030-க்குள் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலை: பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் திட்டம்

2030-க்குள் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலை: பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் திட்டம்

பாட்னா:

வரும் 2030-ம் ஆண்​டுக்​குள் ஒரு கோடி இளைஞர்​களுக்கு வேலை​வாய்ப்பு அளிக்க திட்​ட​மிட்​டுள்​ள​தாக பிஹார் முதல்​வர் நிதிஷ் குமார் தெரி​வித்​துள்​ளார்.


இதுகுறித்து அவர் எக்ஸ் தளத்​தில் மேலும் கூறி​யுள்​ள​தாவது: இது​வரை, மாநிலத்​தில் 10 லட்​சம் இளைஞர்​களுக்கு அரசு வேலைகள் வழங்​கப்​பட்​டுள்​ளன, ஒட்​டுமொத்த அளவில் 39 லட்​சம் பேருக்கு வேலை​வாய்ப்பு வழங்​கப்​பட்​டுள்​ளது. இதையடுத்​து, 50 லட்​சம் இளைஞர்​களுக்கு வேலை​வாய்ப்பு வழங்​கும் இலக்கு நிச்​சய​மாக எட்​டப்​படும்.


இந்த சூழலில், அடுத்த ஐந்து ஆண்​டு​களுக்கு (2025-2030) ஒரு கோடி இளைஞர்​களுக்கு வேலை வாய்ப்பை வழங்​கு​வதன் மூலம் இலக்கை இரட்​டிப்​பாக்க திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது. இதனை அடைய தனி​யார் துறை அதி​லும் குறிப்​பாக தொழில்​துறை பிரிவு​களில் புதிய வேலை வாய்ப்​பு​கள் உரு​வாக்​கப்​படும். இதற்​காக ஒரு உயர்​மட்​டக் குழு அமைக்​கப்​பட்​டுள்​ளது. இவ்​வாறு நிதிஷ் குமார் கூறியுள்​ளார்.


பிஹார் மாநில தேர்​தல் இந்த ஆண்டு இறு​தி​யில் அக்​டோபர் அல்​லது நவம்​பரில் நடை​பெறும் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது. எனினும், இதற்​கான கால அட்​ட​வணையை தேர்​தல் ஆணை​யும் இன்​னும் அறிவிக்​க​வில்​லை.



மியான்மர் உல்பா-ஐ அலுவலகம் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தவில்லை: இந்திய ராணுவ உயர் அதிகாரி தகவல்


குவாஹாட்டி: அசாம் ஐக்கிய சுதந்திர முன்னணி-இண்டிபென்டன்ட் (உல்பா-ஐ), அசாம் மாநிலத்துக்கு தனி நாடு அந்தஸ்து கோரி வருகிறது. மத்திய அரசால் தடை செய்யப் பட்ட இந்த அமைப்பின் கிழக்கு தலைமையகம் மியான்மர் எல்லையில் உள்ளது.


இதன் மீது இந்திய ராணுவம் நேற்று அதிகாலையில் நடத்திய ட்ரோன் தாக்குதலில் தங்கள் அமைப்பைச் சேர்ந்த கமாண்டர் நயன் மெதி உட்பட 19 பேர் உயிரிழந்ததாகவும் மேலும் 19 பேர் காயமடைந்ததாகவும் உல்பா-ஐ அமைப்பு நேற்று தெரிவித்தது. ஆனால் இந்திய ராணுவம் இதை மறுத்துள்ளது.


இதுகுறித்து ராணுவ (குவா ஹாட்டி) மக்கள் தொடர்பு அதிகாரி லெப்டினன்ட் கர்னல் மகேந்திர ராவத் கூறும்போது, “இந்த தாக்குதலை இந்திய ராணுவம் நடத்தவில்லை’’ என்றார்.


இதுகுறித்து அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா கூறும்போது, “உல்பா-ஐ அமைப்பினர் மீது அசாம் போலீஸார் எந்தத் தாக்குதலையும் நடத்தவில்லை. இதுபோல அசாம் மண்ணில் இருந்தும் தாக்குதல் நடத்தப்படவில்லை.


ராணுவம் தாக்குதல் நடத்தி இருந்தால் அதுகுறித்து அறிக்கை வெளியாகி இருக்கும். ஆனால் ராணுவம் சார்பிலும் எந்த அறிக்கையும் வெளியாகவில்லை’’ என்றார்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%