‘2வது அணு ஆயுத ஏவுகணை சோதனை வெற்றி’’: ரஷ்ய அதிபர் புடின் அறிவிப்பு

‘2வது அணு ஆயுத ஏவுகணை சோதனை வெற்றி’’: ரஷ்ய அதிபர் புடின் அறிவிப்பு


மாஸ்கோ, அக்.30–


‘‘அணு ஆயுதங்களைப் பயன்படுத்தி எல்லையற்ற தூரம் செல்லும் நீர்மூழ்கி ட்ரோனை ரஷ்யா வெற்றிகரமாக சோதனை செய்தது’’ என அந்நாட்டு அதிபர் புடின் தெரிவித்து உள்ளார்.


ரஷ்யா, உக்ரைன் - இடையிலான போர் தொடங்கி 3 ஆண்டுகளை கடந்து விட்டது. இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப் உள்பட பல்வேறு உலக நாடுகளின் தலைவர்கள் ஏராளமான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சூழலில், அணுசக்தி ஏவுகணையான புரெவெஸ்ட்னிக் சோதனை வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டதாக ரஷ்ய அதிபர் புடின் தெரிவித்து இருந்தார்.


இந்த சோதனை தேவையில்லாத ஒன்று அதிபர் டிரம்ப் எதிர்ப்பு தெரிவித்து இருந்தார். இந்நிலையில், அணு ஆயுதங்களை பயன்படுத்தி எல்லையற்ற தூரம் செல்லும் நீர்மூழ்கி ட்ரோனை ரஷ்யா வெற்றிகரமாக சோதனை செய்தது என அந்நாட்டு அதிபர் புடின் தெரிவித்து உள்ளார்.


இது குறித்து அதிபர் புடின் பேசுகையில், ‘‘அணு ஆயுதங்களை பயன்படுத்தி எல்லையற்ற தூரம் செல்லும் நீர்மூழ்கி ட்ரோன் 'போஸிடான் சூப்பர் டார்பிடோ' வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. இந்த ட்ரோன் ரஷ்யாவின் மிகவும் சக்திவாய்ந்த ஏவுகணையை விட தாக்கும் திறன் கொண்டது’’ என்றார்.


‘‘பெரிய நீர்மூழ்கி கப்பலில் இருந்து ஏவப்பட்ட போஸிடான் நீர்மூழ்கி ட்ரோனில், சாதாரண அணு உலையை போல் 100 மடங்கு சிறிய அணு சக்தி இன்ஜின் பொருத்தப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். இந்த சோதனை முயற்சி அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளுடனான ரஷ்யாவின் பதற்றத்தை அதிகரிக்கும்’’ என சர்வதேச அரசியல் நிபுணர்கள் தெரிவித்தனர்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%