வானம் உன் கைகளுக்குள்

வானம் உன் கைகளுக்குள்

-பாவலர் கருமலைத்தமிழாழன்


பூந்தென்றல் வீதியுலா

 புறப்பட்டு வருவதற்கே

ஏந்திவரும் பல்லக்கை

 எதிர்பார்த்தா காத்துளது ?


காரிருளை மாய்ப்பதற்குக்

 கதிரவன்தான் காலைவர

தேரினையா எதிர்பார்த்துத்

 தெருமுனையில் காத்துளது ?


கண்களினைப் பறிக்கின்ற

 கார்மேக மின்னல்தான்

மின்சாரம் எதிர்பார்த்தா

 மின்னுதற்குக் காத்துளது ?


தானிறங்கி வருவதற்குத்

 தரையிருந்து குழாய்இணைப்பு

வானிற்கு வருமென்றா

வளமழையும் காத்துளது ?


சாதனைகள் புரிவதற்குச்

 சந்தர்ப்பம் வாய்க்குமென்று

சோதனைகள் செய்யாமல்

 சோம்பலுடன் இருப்பதுவோ ?


வாய்ப்புகளோ உனைத்தேடி

 வரவேற்பு கொடுக்காது

வாய்ப்புகளை உருவாக்கு

வானம்உன் கைகளுக்குள் !

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%