வாடிப்பட்டி, பிப்.13-
மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் சோழவந்தான் தொகுதி தி.மு.க. சார்பாக மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டை வஞ்சித்த மத்திய அரசை கண்டித்து ஸ்டேட் பேங்க் முன்பாக ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வெங்கடேசன் எம்.எல். ஏ தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். மாநில பொதுக்குழு உறுப்பினர் சேகர், பேரூர் செயலாளர்கள் பால்பாண்டி, சத்திய பிரகாஷ், ஒன்றிய செயலாளர்கள் பால ராஜேந்திரன், பசும்பொன்மாறன், வழக்கறிஞர் கோகுல்நாத், அவைத் தலைவர் திரவியம், சோழவந்தான் பேரூராட்சித் தலைவர் ஜெயராமன், பேரூராட்சி துணைத் தலைவர் கார்த்திக், கவுன்சிலர் ஜெயகாந் தன், மருதுபாண்டி, முருகன், எல்.எல்.அய்யாவு, முரளி, மகேஷ், இ.காங்கிரஸ் கமிட்டி நகர தலைவர் முருகானந்தம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?