news Breaking News
clock

மல்லை சத்யா-வின் புதிய கட்சிக் கொடி அறிமுகம்

மல்லை சத்யா-வின்  புதிய கட்சிக் கொடி  அறிமுகம்

காஞ்சிபுரம்: மல்லை சத்யாவை மதிமுகவில் இருந்து நிரந்தரமாக நீக்கி கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ அறி வித்தார். இந்நிலையில், காஞ்சிபுரத்தில் புதிய கட்சிக் கொடியை அறி முகப்படுத்தியுள்ளார் சத்யா. இதில் மதிமுகவில் இருந்து ஏற்கனவே வில கிய முன்னாள் அவைத் தலைவர் திருப்பூர் துரை சாமி, நாஞ்சில் சம்பத், ‘பொடா’ செவந்தியப்பன், ‘பொடா’ அழகுசுந்தரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியின் போது பேசிய வல்லம் பஷீர், “மல்லை சத்யா தொடங் கும் புதிய கட்சி அல்லது அமைப்பின் பெயர் நவம்பர் 20 ஆம் தேதி அறிவிக்கப்படும்” என் றார். இதில் பங்கேற்ற வர்களுக்கு வழங்கிய நினைவு சின்னத்தில் ‘திராவிட குடியரசு விடு தலைக் கழகம்’ என்ற பெயர் இருந்ததால், அதுவே கட்சிப் பெயராக இருக்கலாம் என்று தக வல் வெளியாகியுள்ளது.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News