புத்தாண்டில்... புத்தாக்கம்...

புத்தாண்டில்... புத்தாக்கம்...




புதுமைகள் பெருகட்டும்...


பூபாளம் ....இசைக்கட்டும்


வாடி நின்ற பொழுதுகள்....


வாய்ப்புகளை வழங்கட்டும்...


தேங்கி நின்ற வாழ்க்கை...


தேரோட்டம் காணட்டும்..


உதிர்ந்த மகிழ்ச்சி...


புத்தம் புதிதாய்..பூக்கட்டும்...



வாட்டிய கடன்கள்...


ஆதவன் ஒளியில் பனித்திவலைகளாய்...மறையட்டும்..



கலங்கி நின்ற... தருணங்கள்...


கணப்பொழுதில்...கரையட்டும்....



நிறைவேறாத கனவுகள்...



அதிகாலையில் நம்மை.. அடையட்டும்...



புத்தாண்டே...வருக...


புதுப் பொலிவைத் ...தருக...



தே.சௌந்தரராஜன்

கல்யாணம் பூண்டி

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%