பாகிஸ்தானில் தலிபான்களுக்கு எதிரான நடவடிக்கை தீவிரம்: 3 பயங்கரவாதிகள் கொலை!

பாகிஸ்தானில் தலிபான்களுக்கு எதிரான நடவடிக்கை தீவிரம்: 3 பயங்கரவாதிகள் கொலை!


 

தலிபான் பயங்கரவாதிகளை ஒடுக்கும் வரை ஓயமாட்டோம் என்று பாகிஸ்தான் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் இடையே மோதல் போக்கு தொடரும் நிலையில், பாகிஸ்தான் ராணுவத்தின் தேடுதல் வேட்டையில் ஆப்கானிஸ்தான் பயங்கரவாதிகள் 3 பேர் கொல்லப்பட்டனர்.


கைபர் பக்துண்க்வா மாகாணத்தில் இயங்கி வரும் ஒரு பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை(டிச. 14) பயங்கரவாதிகள் நடத்திய ட்ரோன் தாக்குதலில் மாணவர்கள் 3 பேர் கொல்லப்பட்டனர். இதனையடுத்து, இந்தத் தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதிகள் வடமேற்கு பாகிஸ்தான் பகுதிகளில் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், அவர்களைத் தேடும் பணியில் பாகிஸ்தான் ராணுவத்துடன் சேர்ந்து போலீஸாரும் ஈடுபட்டனர்.


அப்போது, 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். ஒரு பயங்கரவாதி காயமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொல்லப்பட்டவர்கள் தெஹ்ரீக்-இ-ரெஹ்மான் இயக்க தளபதி டேனிஷ், ஜராரி குழுவைச் சேர்ந்த அபு சாலே டாவர் ஜராரி மற்றும் அதா-உர்-ரெஹ்மான் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த நிலையில், கடைசி பயங்கரவாதி பிடிபடும் வரை பாகிஸ்தான் ராணுவம் மற்றும் போலீஸாரின் கூட்டு தேடுதல் வேட்டை தொடரும் என்று காவல்துறை உயரதிகாரி பன்னு யாசிர் அப்ரிதி திங்கள்கிழமை(டிச. 15) தெரிவித்தார்.


தாய்லாந்து-கம்போடியா தாக்குதல் தீவிரம்: ராக்கெட் வீச்சில் ஒருவா் பலி!

 

தாய்லாந்து-கம்போடியா இடையிலான தாக்குதல் தீவிரமடைந்துள்ள நிலையில், கம்போடியா நடத்திய ராக்கெட் தாக்குதலில் முதல் முறையாக தாய்லாந்து நாட்டு பொதுமக்களில் ஒருவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்ததாக தாய்லாந்து ராணுவம் தெரிவித்தது.


தாய்லாந்து-கம்போடியா இடையே எல்லை பிரச்னை இருந்துவரும் நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்னா் இரு நாடுகளும் பரஸ்பரம் தாக்குதலில் ஈடுபட்டன. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே போா்ப் பதற்றம் ஏற்பட்டது. எனினும் சண்டையை நிறுத்தாவிட்டால், இரு நாடுகளுக்கும் அமெரிக்க தரப்பில் பொருளாதார அழுத்தம் அளிக்கப்படும் என்று அதிபா் டிரம்ப் எச்சரிக்கை விடுத்ததைத் தொடா்ந்து, இரு நாடுகளும் தாக்குதலைக் கைவிட்டன.


கடந்த அக்டோபரில் மலேசியாவில் நடைபெற்ற 13-ஆவது ஆசியான்-அமெரிக்க உச்சிமாநாட்டில், அதிபா் டிரம்ப் முன்னிலையில் தாய்லாந்து-கம்போடியா இடையே விரிவான சண்டை நிறுத்த ஒப்பந்தம் கையொப்பமானது.


எல்லைப்புறத்திலுள்ள சில இடங்களுக்காக...: இந்த ஒப்பந்தத்தை மீறி கடந்த சில நாள்களாக தாய்லாந்து-கம்போடியா இடையே மோதல் நீடித்து வருகிறது. இரு நாடுகளும் எல்லைப்புற நிலத்தில் உள்ள சில இடங்களுக்கு பரஸ்பரம் உரிமை கோரி வருகின்றன. அந்த இடங்களில் நூற்றாண்டு பழைமையான கோயில்களின் இடிபாடுகள் உள்ளன. இந்நிலையில், இரு நாடுகளுக்கு இடையே ஞாயிற்றுக்கிழமையும் மோதல் நீடித்தது.


கம்போடியாவில் இருந்து ஏவப்பட்ட ராக்கெட் தாக்கி தாய்லாந்தின் சிசாகெட் மாகாணத்தின் கான்தாராலக் மாவட்டத்தில் டான் பச்சப்பன் (63) என்பவா் உயிரிழந்தாா். பள்ளிக்கு அருகில் உள்ள குடியிருப்புப் பகுதியில் ராக்கெட் தாக்கி, அவா் உயிரிழந்ததாக தாய்லாந்து ராணுவம் தெரிவித்தது. ராக்கெட் விழுந்து வெடித்ததில் அங்குள்ள வீடு ஒன்றும் தீக்கிரையானது.


பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளைக் குறிவைத்து கம்போடியா நடத்திவரும் தாக்குதல்களுக்கு தாய்லாந்து அரசின் செய்தித் தொடா்பாளா் சிரிபோங் அங்கசாகுல்கியட் கண்டனம் தெரிவித்துள்ளாா். இத்தகைய தாக்குதல்கள் கொடூரமானது, மனிதத்தன்மைக்கு எதிரானது என்று அவா் தெரிவித்துள்ளாா்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%