
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி கிளை நூலகத்தில் நேற்று நூலகர் தினத்தையொட்டி நடைபெற்ற நிகழ்வில் நூலகத் தந்தை எஸ்.ஆர்.அரங்கநாதன் திருவுருவப் படத்திற்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும் நடைபெற்ற நிகழ்வில் வந்தை வட்ட கோட்டை தமிழ்ச் சங்க துணை தலைவர் பா.சீனிவாசன் பங்கேற்று, வாசிப்பும் நேசிப்பும் என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். இந்த நிகழ்வில் இரண்டாம் நிலை நூலகர் சி.சேகர், மூன்றாம் நிலை நூலகர் சு. சுந்தர் உள்ளிட்ட நூலக வாசகர்கள் பலரும் பங்கேற்றனர்.
பா. சீனிவாசன், வந்தவாசி.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%