அறுசீர் மண்டிலம்.
ஆவலினால்
அதிகமாகப்
பேசாதே
அன்பான
பேச்சுக்கே
மதிப்புண்டு!
மேவுகின்ற
வகையினிலே
பேசினாலே
மேன்மையென்றே
போற்றிடுவர்
எல்லோரும்!
பூவினைப்போல்
மென்மையாகப்
பேசிடுவாய்
புத்தெழுச்சி
கொண்டேதான்
பேசிடுவாய்!
*நாவடக்கம்*
எந்நாளும்
நல்லதன்றோ
நாளும்தான்
சிந்தித்துப்
பேசலாமே!
நாவாலே
கெட்டவர்கள்
பலருண்டு
நன்மையின்றித்
தின்மையினைப்
பெற்றாரே!
ஏவுமாறு
எப்போதும்
பேசாதே
எழிலாக
எஞ்ஞான்றும்
பேசிடுவாய்!
கூவுகின்ற
முறையினிலே
பேசாதே
கொஞ்சுகின்ற
தமிழ்போலப்
பேசிடுவாய்!
*நாவடக்கம்*
எந்நாளும்
நன்றன்றோ
நாளும்தான்
சிந்தித்துப்
பேசலாமே!
*முனைவர்*
*இராம.வேதநாயகம்*
திருவண்ணாமலை.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?