தொடர் நாயகனாக சிராஜை தேர்வு செய்ய மெக்கல்லம் விரும்பினார்: தினேஷ் கார்த்திக்
Aug 07 2025
27

இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. கடைசி நாளான நேற்று 35 ரன்கள் தேவை என்ற நிலையில், இங்கிலாந்து கையில் 4 விக்கெட்டுகள் இருந்தன.
முகமது சிராஜ் அபாரமாக பந்து வீச இந்தியா 6 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன், தொடரை 2-2 என சமன் செய்தது.
இந்த தொடரில் இங்கிலாந்து பயிற்சியாளர் இந்திய வீரரில் ஒருவரை தொடர் நாயகனாக தேர்வு செய்ய வேண்டும். அதன்படி மெக்கல்லம் 754 ரன்கள் குவித்த இந்திய அணி கேப்டன் சுப்மன் கில்லை தேர்வு செய்தார்.
இந்த நிலையில் மெக்கல்லம் சுப்மன் கில்லிற்குப் பதிலாக முகமது சிராஜை தொடர் நாயகனாக தேர்வு செய்ய விரும்பினார் என தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
"போட்டி 4ஆவது நாள் முடிந்திருந்தால், சுப்மன் கில் தொடர் நாயகனாக அறிவிக்கப்பட்டிருப்பார். வர்ணனையாளரான மைக் ஆதர்டன் பரிசளிப்பு விழாவை தொகுத்து வழங்க இருந்தார். ஆகவே, அவர் அனைத்து கேள்விகளை தயார் செய்து வைத்திருந்தார். எல்லாமே கில்லுக்காக தயாராக இருந்தது.
ஆனால் கடைசி நாளில் முகமது சிராஜ் அபாரமாக பந்து வீசினார். அரைமணி நேரத்திற்குள் மெக்கல்லம் தொடர் நாயகன் விருது முடிவை மாற்றி முகமது சிராஜிக்கு மாற்ற விரும்பினார். போட்டிக்குப் பிறகு கூட ஸ்கை ஸ்போர்ட்ஸ் சேனலில் பேசும்போது, முகமது சிராஜ் குறித்து பேசினார். சிராஜ் பந்து வீச்சு பார்த்து எப்படி மகிழ்ந்தார், அவரை பற்றிய அனைத்து அருமையான விசயங்கள் குறித்து பேசினார்" என தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?