தேசிய சிறார் விருது பெற்ற ஷ்ரவன் சிங் யார்?

தேசிய சிறார் விருது பெற்ற ஷ்ரவன் சிங் யார்?


 

புதுடெல்லி: பஞ்​சாபின் பெரோஸ்​பூர் மாவட்​டம், மம்​டோட் கிராமத்தை சேர்ந்​தவர் சோனா சிங். இவரது மனைவி சந்​தோஷ் ராணி. பாகிஸ்தான் எல்​லை​யில் இருந்து 2 கி.மீ. தொலை​வில் மம்​டோட் கிராமம் உள்​ளது. அங்கு ஒரு ஏக்​கர் நிலம் வைத்​திருக்​கும் சோனா சிங் விவ​சா​யத்​தில் ஈடு​பட்டு வரு​கிறார்.


காஷ்மீரின் பஹல்​காம் தீவிர​வாத தாக்​குதலுக்கு பதிலடி​யாக கடந்த மே 7-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை ஆபரேஷன் சிந்​தூர் ராணுவ நடவடிக்கை மேற்​கொள்​ளப்​பட்​டது. அப்​போது மம்​டோட் கிராமத்​தில் சோனி சிங்​கின் விவ​சாய நிலத்​தில் இந்​திய ராணுவ வீரர்​கள் முகாமிட்டு பாகிஸ்​தானுக்கு எதி​ராக போரில் ஈடு​பட்​டனர்.


பாகிஸ்​தான் ராணுவம் குண்​டு மழையை பொழிந்து கொண்​டிருந்​த​போது, அதற்கு அஞ்​சாமல் சோனா சிங்​கின் 10 வயது மகன் ஷ்ரவன் சிங் துணிச்​சலாக போர் முனைக்​குச் சென்று இந்​திய ராணுவ வீரர்​களுக்கு குடிநீர், பால், மோர், தேநீர், உணவு வகைகளை வழங்கி​னார். இதற்​காக ராணுவத்​தின் சார்​பில் இளம் சிவில் வீரர் என்ற விருது ஷ்ர​வன் சிங்​குக்கு வழங்​கப்​பட்​டது.


இந்த சூழலில் வீர, தீர செயலுக்காக அவருக்கு நேற்று முன்​தினம் தேசிய சிறார் விருதை குடியரசுத் தலை​வர் திர​வுபதி முர்மு வழங்​கி​னார். இதுகுறித்து ஷ்ர​வன் சிங் கூறும்​போது, “நான் அரசு பள்​ளி​யில் 5-ம் வகுப்பு படிக்​கிறேன். ஆபரேஷன் சிந்​தூரின்​போது ராணுவ வீரர்​கள் எங்​கள் கிராமத்​தில் முகாமிட்​டனர். அவர்களுக்கு தேநீர் உள்​ளிட்ட பானங்​கள் மற்​றும் உணவு வழங்கினேன். இதை பாராட்டி எனக்கு விருது வழங்​கப்​பட்டு இருக்கிறது. நான் பெரிய​வ​னாக வளர்ந்த பிறகு ராணுவத்​தில் சேர்ந்து நாட்​டுக்கு சேவை​யாற்​று​வேன்’’ என்று தெரி​வித்​தார்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%