திருச்சி விமான நிலையத்தில் ரூ.12 கோடி மதிப்பிலான ஹைட்ரோ கஞ்சா பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் ரூ.12 கோடி மதிப்பிலான ஹைட்ரோ கஞ்சா பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட ஹைட்ரோ கஞ்சா.

திருச்சி: ​திருச்சி விமான நிலை​யத்​தில் கேரளாவைச் சேர்ந்த பயணி ஒரு​வரிட​மிருந்து ரூ.12 கோடி மதிப்​பிலான, 11.8 கிலோ ஹைட்ரோ கஞ்சா பறி​முதல் செய்​யப்​பட்​டுள்​ளது. திருச்சி விமான நிலை​யத்​தில் இருந்து இந்​தி​யா​வின் பல்​வேறு முக்​கிய நகரங்களுக்​கும், வெளி​நாடு​களுக்​கும் விமான சேவை​கள் வழங்​கப்​பட்டு வரு​கின்​றன.


பொது​வாக தங்​கக் கடத்​தல் அதி​க​மாக நடக்​கும் இந்த விமான நிலை​யத்​தில், தற்​போது உயர்ரக கஞ்​சாவை கடத்தி வரு​வதும் அதிகரித்து வரு​கிறது. இந்​நிலை​யில், தாய்​லாந்து தலைநகர் பாங்​காக்​கில் இருந்​து, மலேசிய தலைநகர் கோலாலம்​பூர் வழி​யாக திருச்சி விமான நிலை​யத்​துக்கு ஏர் ஏசியா விமானத்​தில் வந்த பயணி​கள் மற்​றும் அவர்​களது உடைமை​களை வான் நுண்​ணறிவு சுங்​கத் துறை அதி​காரி​கள் சோதனை செய்​தனர்.




அப்​போது, கேரளாவைச் சேர்ந்த பயணி ஒரு​வரின் உடைமை​யில், 11.8 கிலோ எடை​உள்ள ஹைட்​ரோ​போனிக் வகை கஞ்சா இருப்​பது தெரிய​வந்​தது. ரூ.12 கோடி மதிப்​பிலான அந்த உயர் ரக கஞ்​சாவைப் பறி​முதல் அதி​காரி​கள், அதை கடத்தி வந்த பயணி​யிடம்​ வி​சா​ரணை நடத்​தி வரு​கின்​றனர்​.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%