செய்யாறில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் 16 வது வார திருக்குறள் பயிற்சி வகுப்பு:

செய்யாறில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் 16 வது வார திருக்குறள் பயிற்சி வகுப்பு:



செய்யாறு ஜன. 25,


செய்யாறு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மையத்தில் 16 வது வார திருக்குறள் பயிற்சி வகுப்பு நடைபெற்றது.


திருவண்ணாமலை மாவட்டம் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் செய்யாறு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கூட்ட அரங்கில் 16 வது வார திருக்குறள் பயிற்சி வகுப்பு நேற்று காலை நடைபெற்றது.


நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜி ஜெயகாந்தன் தலைமை தாங்கி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். திருக்குறள் பயிற்சியாளர் கவிஞர் எறும்பூர் கை. செல்வகுமார் முன்னிலை வகித்து வரவேற்றுப் பேசினார்.


பயிற்சியில் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த 23 மாணவ, மாணவியர், இரண்டு பயிற்சியாளர்கள், தலைமை ஆசிரியர் ஒருவர் என 26 பேர் நேற்றைய பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டனர். முடிவில் பயிற்சியாளர் புலவர் ந.கனகசபை நன்றி கூறினார்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%