சென்னை முகத்துவாரத்தில் தூர்வாரும் பணிகளை பார்வையிட்டார் ஸ்டாலின்

சென்னை முகத்துவாரத்தில் தூர்வாரும் பணிகளை பார்வையிட்டார் ஸ்டாலின்



சென்னை, அக்.24–


முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை சீனிவாசபுரம் அருகில் அடையாறு ஆறு கடலில் கலக்கும் முகத்துவாரத்தில் நடைபெற்றுவரும் தூர்வாரும் பணிகளை பார்வையிட்டு, ஆய்வு செய்து முகத்துவாரத்தை அகலப்படுத்தும் பணிகளை விரைந்து முடித்திடுமாறு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.


சென்னை நகரின் மூன்று முக்கிய ஆற்றுப்படுகையில் ஒன்றான அடையாறு ஆறு - ஆதனூர் ஏரியில் இருந்து உருவாகி மொத்தம் 42.38 கி.மீ நிளத்திற்கு பயணித்து பட்டினப்பாக்கம், சீனிவாசபுரம் அருகில் வங்காள விரிகுடாவில் கலக்கிறது.


தற்போது, பெய்துவரும் கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரி வேகமாக நிரம்பி வருவதன் காரணமாக இன்று 945 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.


முதலமைச்சர், அடையாறு ஆற்றின் முகத்துவாரத்தை சுமார் 150 மீட்டர் அகலப்படுத்த ஏற்கனவே உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து, இன்றையதினம் ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர், முகத்துவாரப் பகுதியில், பொக்லைன் இயந்திரங்கள் மற்றும் ஜேசிபி இயந்திரங்களைக் கொண்டு தூர்வாரி அகலப்படுத்தும் பணிகளை பார்வையிட்டு, கரைப்பகுதியில் தூர்வாரி அள்ளப்பட்ட மணல் குவியலை உடனடியாக அகற்றிடவும், இப்பகுதியில் கூடுதலாக இரண்டு பொக்லைன் இயந்திரங்களைப் பயன்படுத்தி, முகத்துவாரப் பகுதியினை அகலப்படுத்தி தூர் வாரும் பணிகளை விரைந்து முடிக்கவும் அறிவுறுத்தினார்.


மேலும், அடையாறு ஆறு கடலில் கலக்கும் முகத்துவாரப் பகுதியினை மாநகராட்சி வட்டார துணை ஆணையர் தலைமையில் நீர்வளத்துறை மற்றும் சென்னை மாநகராட்சி அலுவலர்கள் கொண்ட குழுவினை அமைத்து வடகிழக்கு பருவமழை காலம் முழுவதும் கண்காணிப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்ளவும் அலுவலர்களுக்கு முதலமைச்சர் உத்தரவிட்டார்.


இந்த ஆய்வின்போது அமைச்சர் மா.சுப்பிரமணியன், சட்டமன்ற உறுப்பினர் நா.எழிலன், தெற்கு வட்டார துணை ஆணையாளர் அஃதாப் ரசூல், நீர்வளத்துறை செயற்பொறியாளர் அருண்மொழி மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%