சர்வதேச பேட்மிண்டன் சம்மேளனத்தின் வீரர் - வீராங்கனைகளின் ஆணைய தலைவராக பி.வி.சிந்து நியமனம்
Dec 27 2025
11
சர்வதேச பேட்மிண்டன் சம்மே ளனம் மலேசியா தலை நகர் கோலாலம்பூரில் உள்ளது. இந்த சம்மேளனத்தின் வீரர் - வீராங்கனை களின் விளையாட்டு ஆணைய பிரிவு தலைவராக இந்தியாவின் நட்சத்திர பேட்மிண்டன் வீராங்கனையும், ஒலிம்பிக் பதக்க நாயகியுமான பி.வி. சிந்து நியமிக்கப்பட்டுள்ளார். பி.வி.சிந்து 2026ஆம் ஆண்டு முதல் 2029ஆம் ஆண்டு வரை 3 ஆண்டுகள் இந்த பதவியில் இருப்பார். மேலும் சர்வதேச பேட்மிண்டன் சம்மே ளனத்தின் உறுப்பினராகவும், வாக்கு ரிமை கொண்ட உறுப்பினராகவும் அவர் செயல்படுவார். டென்மார்க்கின் கேத்ரின் ரோசன் கிரென் துணைத் தலைவராகவும், அமி பர்னட் (அமெரிக்கா), கெயிலி (பிரான்ஸ்), அபு ஹுபைடா (இந்தியா) மற்றும் தாரெக் அப்பாஸ் கரிப் சஹ்ரி (எகிப்து) ஆகியோர் ஆணையத்தின் மற்ற உறுப்பினர்களாக செயல்பட உள்ளனர். பி.வி. சிந்து 2017 முதல், சர்வதேச பேட்மிண்டன் சம்மேளனத்தின் வீரர் - வீராங்கனைகளின் ஆணைய உறுப் பினராக பணியாற்றி வருகிறார். மேலும் 2020 முதல் சர்வதேச பேட் மிண்டன் இன்டெக்ரிட்டி (ஊழல், மோசடி மற்றும் தவறான செயல் களிலிருந்து பாதுகாப்பதற்காக) தூதராகவும் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?