
_கவியரசர் கண்ணதாசன் அவர்கள் சொன்னது:
_ஆகாயத்தின் மேலிருந்து ஆளே தெரியாமல் ஆட்டியும் வைப்பான்._
_மனிதனின் ஆட்டம் கொஞ்சம் அதிகமானால் அடக்கியும் வைப்பான்._
_*அவன் தான் கடவுள்*_
_பூலோகத்தில் வாழும்போது புகழையும் கொடுப்பான்._
_பின்னர் புகழுக்காக வாழும் போது புரட்டியும் எடுப்பான்._
_*அவன் தான் கடவுள்*_
_பூவிலே கொஞ்சம் தேனையும் வைப்பான்._
_அங்கே தேனை வைத்ததை தேனீக்கும் சொல்வான்._
_பின்னர் அந்தத் தேனடை இருப்பதை மனிதனுக்கும் சொல்வான்._
_*அவன் தான் கடவுள்*_
_கேட்கும் திறனை கூர்மையாக எலிக்கும் வைப்பான்._
_அந்த எலியே கேட்க முடியாமல் நடக்கும் பாதங்களை பூனைக்கும் வைப்பான்._
_*அவன் தான் கடவுள்*_
_ஓடும் திறனை கூட்டுகின்ற கால்களை (மானுக்கு) கொடுப்பான்._
_பின்னர் அந்த மானை பிடிக்கின்ற சக்தியை புலிக்கும் கொடுப்பான்._
_*அவன்தான் கடவுள்*_
_அற்புதமாய் சிந்திக்கின்ற ஆறறிவையும் கொடுப்பான்._
_அதை முழுதும் பயன்படுத்தாத மனிதர்களையும் படைப்பான்._
_*அவன் தான் கடவுள்*_
_தவம் பல செய்தால் (மனிதன்) கேட்பதைக் கொடுப்பான்._
_அவனே தறிகெட்டு நடந்தால் கொடுத்ததைப் பறிப்பான்._
_*அவன்தான் கடவுள்*_
_நாட்டை ஆள விட்டு அழகும் பார்ப்பான்._
_அவனே கொள்ளையடித்தால் கொடுத்தவனே பிடுங்கவும் செய்வான்._
_*அவன் தான் கடவுள்*_
_புரியாதவனுக்கு புதிராய் இருப்பான்._
_தன்னைப் புரிந்தவனுக்கு அறிவாய் இருப்பான்._
_*அவன் தான் கடவுள்*_
_கடல் முழுதும் தண்ணீரை வைப்பான்._
_தாகம் எடுத்தால் தவிக்கவும் வைப்பான்._
_*அவன் தான் கடவுள்*_
_மாளிகையில் வாழ்பவன் ஆயுள் அற்பமாய் முடியும்._
_சாலையோரம் வாழ்பவன் நூறாண்டு வாழ்வான்._
_பின்னிருந்து இயக்குவான்._
_*அவன் தான் கடவுள்*_
_தன்னை வெளியே தேடினால் விளையாட்டு காட்டுவான்._
_(உள்ளத்தின்) உள்ளே தேடினால் ஓடி வந்து நிற்பான்._
_*அவன் தான் கடவுள்*
நடேஷ் கன்னா
கல்லிடைக்குறிச்சி
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?