கடவுள் எப்படிப்பட்டவன்?

கடவுள் எப்படிப்பட்டவன்?


_கவியரசர் கண்ணதாசன் அவர்கள் சொன்னது:


_ஆகாயத்தின் மேலிருந்து ஆளே தெரியாமல் ஆட்டியும் வைப்பான்._ 

_மனிதனின் ஆட்டம் கொஞ்சம் அதிகமானால் அடக்கியும் வைப்பான்._

_*அவன் தான் கடவுள்*_


_பூலோகத்தில் வாழும்போது புகழையும் கொடுப்பான்._

_பின்னர் புகழுக்காக வாழும் போது புரட்டியும் எடுப்பான்._ 

_*அவன் தான் கடவுள்*_

     

_பூவிலே கொஞ்சம் தேனையும் வைப்பான்._

_அங்கே தேனை வைத்ததை தேனீக்கும் சொல்வான்._

_பின்னர் அந்தத் தேனடை இருப்பதை மனிதனுக்கும் சொல்வான்._

_*அவன் தான் கடவுள்*_

    

_கேட்கும் திறனை கூர்மையாக எலிக்கும் வைப்பான்._ 

_அந்த எலியே கேட்க முடியாமல் நடக்கும் பாதங்களை பூனைக்கும் வைப்பான்._ 

_*அவன் தான் கடவுள்*_

    

_ஓடும் திறனை கூட்டுகின்ற கால்களை (மானுக்கு) கொடுப்பான்._ 

_பின்னர் அந்த மானை பிடிக்கின்ற சக்தியை புலிக்கும் கொடுப்பான்._

_*அவன்தான் கடவுள்*_

    

_அற்புதமாய் சிந்திக்கின்ற ஆறறிவையும் கொடுப்பான்._

_அதை முழுதும் பயன்படுத்தாத மனிதர்களையும் படைப்பான்._

_*அவன் தான் கடவுள்*_


_தவம் பல செய்தால் (மனிதன்) கேட்பதைக் கொடுப்பான்._

_அவனே தறிகெட்டு நடந்தால் கொடுத்ததைப் பறிப்பான்._

_*அவன்தான் கடவுள்*_

    ‌ 

_நாட்டை ஆள விட்டு அழகும் பார்ப்பான்._

_அவனே கொள்ளையடித்தால் கொடுத்தவனே பிடுங்கவும் செய்வான்._ 

_*அவன் தான் கடவுள்*_

    

_புரியாதவனுக்கு புதிராய் இருப்பான்._

_தன்னைப் புரிந்தவனுக்கு அறிவாய் இருப்பான்._

_*அவன் தான் கடவுள்*_


_கடல் முழுதும் தண்ணீரை வைப்பான்._

_தாகம் எடுத்தால் தவிக்கவும் வைப்பான்._

_*அவன் தான் கடவுள்*_

      

_மாளிகையில் வாழ்பவன் ஆயுள் அற்பமாய் முடியும்._

_சாலையோரம் வாழ்பவன் நூறாண்டு வாழ்வான்._ 

_பின்னிருந்து இயக்குவான்._

_*அவன் தான் கடவுள்*_

     

_தன்னை வெளியே தேடினால் விளையாட்டு காட்டுவான்._

_(உள்ளத்தின்) உள்ளே தேடினால் ஓடி வந்து நிற்பான்._ 

_*அவன் தான் கடவுள்*



நடேஷ் கன்னா 

கல்லிடைக்குறிச்சி

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%