எழும்பூர் ரெயில் நிலையத்தில் பராமரிப்புப் பணி பாண்டியன், சோழன், மலைக்கோட்டை ரெயில்கள்

எழும்பூர் ரெயில் நிலையத்தில் பராமரிப்புப் பணி பாண்டியன், சோழன், மலைக்கோட்டை ரெயில்கள்

சென்னை, செப். 6–


சென்டைன எழும்பூர் ரெயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருவதால், சில ரெயில்கள் தாம்பரம் வரை மட்டுமே வந்து செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.


இது தொடர்பாக தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:


சென்னை – திருச்சி மலைக்கோட்டை விரைவு ரயில் வரும் 11ம் தேதி முதல் நவம்பர் 10ம் தேதி வரை தாம்பரத்தில் இருந்து புறப்படும். மறுமார்க்கமாகவும் தாம்பரம் வரை மட்டுமே இயங்கும் .மதுரை – சென்னை பாண்டியன் விரைவு ரயில் வரும் 10ம் தேதி முதல் நவம்பர் 9ம் தேதி வரை தாம்பரம் வரை மட்டுமே இயங்கும். எனினும், எழும்பூரில் இருந்து புறப்பாடு மாற்றமில்லை.


சென்னை – திருச்சி சோழன் விரைவு ரயில் வரும் 11ம் தேதி முதல் நவம்பர் 10ம் தேதி வரை தாம்பரத்தில் இருந்து புறப்படும். எனினும், மறுமார்க்கமாக எழும்பூர் வரை இயங்கும்.சென்னை – ராமேஸ்வரம் விரைவு ரயில் வரும் 11ம் தேதி முதல் நவம்பர் 10ம் தேதி வரை தாம்பரத்தில் இருந்து புறப்படும். மறுமார்க்கமாகவும் தாம்பரம் வரை மட்டுமே இயங்கும்.சென்னை – மும்பை விரைவு ரயில் வரும் 11ம் தேதி முதல் நவம்பர் 10ம் தேதி வரை கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும். மறுமார்க்கமாக வழக்கம் போல எழும்பூர் வரை இயங்கும்.


இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%