வளைந்து ஓடும் நதிகள்
கூட கடலில் முடியும்...
உன் நினைவு என்னில்
முடியவில்லை...
காற்றாற்று
வெள்ளம் கூட...
மழை வந்தால்,
மட்டுமே வரும்...
உன் நினவு வரும் போதெல்லாம்
என்னில் மழைதான்...
உருகும்
பனிக்கட்டியால்...
கங்கை ஓயாமல்
ஓடிகொண்டே இருக்கிறது...
உருகும் என்
இதயத்தால்...
என் கண்ணீர் கங்கை
ஓயாமல் ஓடுதடி...
என் இதய துடிப்பு
நிற்கும் வரை...
உன் நினைவு அலைகள்
என்றும் ஓயாமல் ஓடுமடி...
என்னில் முடிவில்லாத
என் பயணமும்...
முடியாத உன்
நினைவுகளும்...
என்னில் ஓயாமல்
தொடருமடி...
கண்ணே என்னோடு
நீ இல்லை என்றாலும்...
எனக்கு
சந்தோசம்தானடி...
உன் நினைவு
என்னுடன் இருகிறதே...
உன் நினைவில் நான்
நீந்துவதர்காகவே...
மரணத்தை நான்
வெறுக்கிறேனடி...
வாழ்ந்து பார்கிறேன்
மண்ணோடு...
உன் நினைவில் நான்...
கவிஞர் பாலசந்தர் மண்ணச்சநல்லூர்
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?