தமிழர் திருநாள் வாழ்த்துகள்!

தமிழர் திருநாள் வாழ்த்துகள்!



கவிஞர் இரா. இரவி.


******


உலகிற்கு எழுத்தறிவித்தவன் தமிழன் என்று

உணர்த்தியது தொல்லியல் ஆய்வில் கீழடி இன்று !


உலகத்தமிழர்கள் யாவரும் ஒன்றிணைந்து

ஒற்றுமைப் பொங்கலை இட்டு மகிழ்வோம் !


பாவாணர் உரைத்தார் அன்றே நன்றே

பைந்தமிழே உலகின் முதல்மொழி என்றே !


தமிழர்களாகப் பிறந்ததற்குப் பெருமை கொள்வோம்

தமிழ்மொழியின் சிறப்பை தமிழர்கள் அறிந்திடுவோம் !


உலகிற்கு நாகரிகம் கற்பித்தவன் தமிழன்

உன்னத அறிவியலும் அறிந்தவன் தமிழன் !


நாமக்கல் கவிஞரின் வைர வரிகளை நினைத்து

நாம் தமிழர்கள் என்று தலைநிமிர்ந்து நிற்போம் !


ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய வரலாறு

அற்புதத் தமிழுக்கு உண்டு என்பது உணரு !


தமிழிலிருந்து பிறந்தவை தான் மற்ற மொழிகள்

தமிழ்ச் சொற்கள் பல உண்டு ஆங்கிலத்தில் !


கன்னடத்திலும் பல உண்டு தமிழ்ச்சொற்கள்

கேரளாவின் மலையாளத்திலும் உண்டு தமிழ்ச்சொற்கள் !


ஆதியில் சிறந்து பிறந்த அற்புதம் தமிழ்

அனைத்து மொழிகளின் தாய் நமது தமிழ் !


செம்மொழிகள் சில இருந்திட்ட போதும்

செம்மொழிகளில் சிறந்த மொழி நம் தமிழ் !


காலத்தால் அழியாத கற்கண்டு நம் தமிழ்

கண்டு உணர்ந்து கற்பிப்போம் குழந்தைகளுக்கு தமிழ் !


உழவைப் போற்றிடும் உன்னதத் திருநாள்

உழைப்பைப் போற்றிடும் ஒப்பற்ற நன்னாள் !


புத்தரிசிப் பொங்கலிட்டு புத்தாடைகள் அணிந்து

பூரித்து மகிழ்ந்திடுவோம் உலகத் தமிழர்கள் யாவரும்! !


தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா

தரணிக்கு உரக்க நீ சொல்லடா புறப்படு தமிழா!

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%