அரசுப் பேருந்து எல்இடி பலகையில் இந்தியில் வரவேற்பு வாசகம்: தஞ்சாவூரில் தமிழ் ஆர்வலர்கள் அதிர்ச்சி

அரசுப் பேருந்து எல்இடி பலகையில் இந்தியில் வரவேற்பு வாசகம்: தஞ்சாவூரில் தமிழ் ஆர்வலர்கள் அதிர்ச்சி


 

தஞ்சாவூர்: அரசுப் பேருந்து எல்​இடி பலகை​யில் இந்தி மொழி​யில் வரவேற்பு வாசகம் இடம் பெற்​றுள்​ளது தமிழ் ஆர்​வலர்​களிடையே அதிர்ச்​சியை ஏற்​படுத்​தி​யுள்​ளது.


அரசுப் போக்​கு​வரத்​துக் கழக தஞ்​சாவூர் புறநகர் பேருந்து பணிமனை​யில் இருந்து திருச்​சி-தஞ்​சாவூர்- கும்​பகோணம் வழித்​தடத்​தில் இயக்​கப்​படும் ஒரு அரசுப் பேருந்​தின் உள்​பகு​தி​யில் உள்ள எல்​இடி பலகை​யில் பயணி​களை வரவேற்​கும் வகை​யில் நல்​வர​வு, வெல்​கம் என தமிழ், ஆங்​கில மொழிகளு​டன், இந்​தி​யிலும் வாசகம் இடம் பெற்​றிருந்​தது.


தமிழகத்​தில் தமிழ், ஆங்​கிலம் என இரு மொழிக்​கொள்​கை​தான் இருக்​கும், 3-வது மொழிக்கு இடமில்லை என்று தமிழக அரசு உறு​தி​யாக கூறி வரும் நிலை​யில், அரசுப் பேருந்​தில் தமிழ், ஆங்​கிலத்​துடன் இந்​தி​யும் இடம் பெற்​றிருப்​பது தமிழ் ஆர்​வலர்​களிடையே அதிர்ச்​சியை ஏற்​படுத்​தி​யுள்​ளது.


இதுகுறித்து அந்​தப் பேருந்​தின் நடத்​துநர், ஓட்​டுநரிடம் கேட்​ட​போது, ‘‘அதுகுறித்து எங்​களுக்கு எது​வும் தெரி​யாது’’ என்​றனர். சமூக செயல்​பாட்​டாள​ரும், தமிழ் ஆர்​வலரு​மான வி.ஜீவக்​கு​மார் கூறும்​போது, “தமிழகத்​தில் இரு​மொழிக் கொள்​கையை மீறி, அரசுப் பேருந்​தில் இந்தி மொழி​யும் இடம் பெற்​றிருப்​பது அதிர்ச்​சியை ஏற்​படுத்​துகிறது. இதனால் அரசுப் போக்​கு​வரத்​துக் கழக​மும் மறை​முக​மாக இந்​தியை ஆதரிக்​கிறதோ என்று எண்​ணத் தோன்​றுகிறது. இது தொடர்​பாக தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்​டும்” என்​றார்.


மாற்ற நடவடிக்கை: அரசுப் போக்​கு​வரத்து கழக அதி​காரி​களிடம் கேட்​ட​போது, ‘‘பு​தி​தாக வாங்​கப்​பட்ட அரசுப் பேருந்​துகள் வடமாநிலத்​தில் இருந்து வந்​துள்​ள​தால், அவற்​றில் இந்தி மொழி​யில் வார்த்​தைகள் இடம் பெற்​றிருக்​கலாம். அதை உடனடி​யாக மாற்ற நடவடிக்கை எடுக்​கப்​படும்​’’ என்​றனர்​.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%