அயோத்தி ராமர் கோயிலுக்கு 286 கிலோ தனுசு காணிக்கை!

அயோத்தி ராமர் கோயிலுக்கு 286 கிலோ தனுசு காணிக்கை!


 

புதுடெல்லி: உத்தர பிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோயி​லில் ராமர் சிலை, கடந்த ஜனவரி 22, 2024-ல் பிராண பிர​திஷ்டை செய்​யப்​பட்டு 2 வருடங்​கள் நிறைவு பெற்​றுள்​ளன. இதையெட்​டி, 286 கிலோ எடை​யுள்ள தனுசு (வில்) நேற்று அயோத்​திக்கு வந்து சேர்ந்தது. இது, ராமர் கோயிலுக்கு காணிக்​கை​யாக, ஒடி​சா​வின் சனாதன ஜாக்​ரன் மஞ்ச் சார்​பில் அளிக்​கப்​பட்​டுள்​ளது.


இது, தமிழ்​நாட்​டின் கோயில் நகர​மான காஞ்​சிபுரத்​தின் 48 பெண் கைவினை கலைஞர்​களால் பஞ்​சலோகத்​தில் செய்​யப்​பட்​ட​தாகும். இந்த தனுசை, ஸ்ரீராம ஜென்​மபூமி அறக்​கட்​டளை​யின் பொதுச்​செய​லா​ள​ரான சம்​பக் ராய், உரிய சடங்​கு​கள் மற்​றும் சம்​பிர​தாய முறை​யில் பெற்​றுக் கொண்​டார். இந்த நிகழ்​வில், ஸ்ரீராம ஜென்​மபூமி அறக்​கட்​டளை அதி​காரி​கள், துறவி​கள் மற்​றும் பக்​தர்​கள் இந்த நிகழ்​வில் கலந்​து​கொண்​டனர்.


இது குறித்து சனாதன ஜாக்​ரன் மஞ்​சைச் சேர்ந்த சந்​தோஷ் குமார் பிஸ்​வாஸ் கூறும்​போது, `இந்த பிரம்​மாண்ட கோதண்​டத்​தைக் கண்ட அனை​வரும் அதன் பிரம்​மாண்​டம், கலைத்​திறன் மற்​றும் தெய்​வீகத்​ தன்​மை​யைக் கண்டு மெய்​சிலிர்த்​தனர். இந்த வரலாற்​றுச் சிறப்​புமிக்க கோதண்​டத்​துட​னான ஊர்​வலம் ஒடி​சா​வின் 30 மாவட்​டங்​கள் வழி​யாகச் சென்​றது.


பக்​தர்​கள் பல்​வேறு இடங்​களில் மலர் தூவி, மேளதாளங்​கள் முழங்க, 'ஜெய் ஸ்ரீ ராம்' என்ற கோஷங்​களு​டன் பக்​தி​யுடன் கோதண்​டத்தை வரவேற்​றனர். இந்த ஊர்​வலம் ஒரு மத யாத்​திரை​யாக மட்​டுமல்​லாமல், சனாதன கலாச்​சா​ரம் மற்​றும் தேசிய ஒற்றுமை​யின் சின்​ன​மாக​வும் மாறியது’ என்​றார்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%