news Breaking News
clock

3,500 கிமீ தூரம் செல்லக்கூடிய கே4 பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை வெற்றி

3,500 கிமீ தூரம் செல்லக்கூடிய கே4 பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை வெற்றி


 

அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கி கப்பலான ஐஎன்எஸ் அரிகாட்டில் இருந்து இந்தியா தனது கே-4 பாலிஸ்டிக் ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்துள்ளது.



நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஏவப்படும் கே-4 பாலிஸ்டிக் ஏவுகணை, 3,500 கிமீ தொலைவில் உள்ள இலக்குகளைத் தாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இந்தத் திறன் இந்திய கடற்படைப் படைகளுக்கு மிகவும் பேருதவியாக இருக்கிறது. இது நீருக்கடியில் இருந்து அணு ஆயுதத் தாக்குதல்களை நடத்தும் திறனை மேம்படுத்துகிறது.



கடந்த 2024ம் ஆண்டு ஆகஸ்ட் 29ம் தேதி, இந்த ஏவுகணை இந்திய கடற்படையில் சேர்க்கப்பட்டது. இதன் மூலம், நிலம், வான் மற்றும் நீருக்கடியில் தளங்களில் இருந்து அணு ஆயுதத்தை ஏவும் திறன் கொண்ட உலக நாடுகள் பட்டியலில் இந்தியாவும் இடம் பெற்றுள்ளது. இது இந்தியாவின் மிக நீண்ட தூரம் சென்று தாக்கும் திறன் கொண்ட ஏவுகணை ஆகும்.



இது 2.5 டன் அணு ஆயுதத்தை சுமந்து செல்லக்கூடியது மற்றும் இந்தியாவின் அரிஹந்த்-வகுப்பு நீர்மூழ்கிக் கப்பல்களில் இருந்து ஏவப்படலாம். இந்த ஏவுகணை பெயரில் உள்ள கே என்பது இந்தியாவின் ஒருங்கிணைந்த வழிகாட்டப்பட்ட ஏவுகணை மேம்பாட்டுத் திட்டத்தில் முக்கிய பங்கு வகித்த ஏபிஜே அப்துல் கலாமை குறிக்கிறது.



தற்போது அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கி கப்பலான ஐஎன்எஸ் அரிகாட்டில் இருந்து இந்தியா தனது கே-4 பாலிஸ்டிக் ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்துள்ளது.இந்த சோதனை விசாகப்பட்டினம் கடற்கரையில் நடந்தது. இந்த ஏவுகணை சோதனை வெற்றி, இந்திய கடற்படையில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News