*தெள்ளார் ஸ்ரீ ஆதி நாராயண பெருமாள் திருபவித்ர உற்சவம்*
Oct 31 2025
65
வந்தவாசி, நவ 01:
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த தெள்ளார் ஸ்ரீ அம்புஜவல்லி தாயார் சமேத ஸ்ரீ ஆதி நாராயண பெருமாள் கோவிலில் திருபவித்ர உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. திருபவித்ர பிரதஷ்டை, கும்ப ஆராதனை, பவித்ரம் சாற்றுதல், மகா யாகசாலை பூஜைகள், திருக்கல்யாண வைபவம் உள்ளிட்டவைகள் நடந்தேறியது. மேலும் மூல மூர்த்திகள் மற்றும் உற்சவ மூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இந்த வைபவத்தில் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பங்கேற்ற அனைவருக்கும் தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டது.
பா. சீனிவாசன் வந்தவாசி
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?