💍தங்கம் எந்த அளவிற்கு சிறப்பு வாய்ந்ததாக சொல்லப்படுகிறதோ அதை விட பல மடங்கு உயர்ந்தது வெள்ளி.
💍நாம் வெள்ளி மோதிரம் அணிவதற்கும், செல்வம் பெருகுவதற்கும் தொடர்பு இருப்பதாக சாஸ்திரம் சொல்கிறது. வெள்ளி என்பது சுக்கிர கிரகத்துடன் தொடர்புடையதாகும். பொதுவாக வெள்ளி மோதிரம் போடுவது சந்திரனை குறிக்கிறது. சந்திரனை மனோ கிரகம் என்று சொல்வோம்.
💍வெள்ளி மோதிரம் அணிவது என்பது இன்றைய இளைஞர்கள் பலரிடமும் இருக்கும் ஒரு பழக்கமாகும். இதன் நன்மைகள் தெரியாமலேயே அதனை அணியும் பழக்கம் பலருக்கும் இருக்கிறது. அதாவது வெள்ளி மோதிரத்தை அணிவது மிகவும் சிறந்தது.
💍உண்மையில் வெள்ளி அணிவது உங்களுக்கு ஆரோக்கியம் ரீதியான பல பலன்களை அளிக்கும். அதேசமயம் சரியான விரலில் மோதிரம் அணிவது வாழ்வில் அதிசயங்களையும் உண்டாக்கும். வெள்ளியை எப்படி பயன்படுத்தினால் வாழ்வில் சிறப்பை உண்டாக்கும்? என்று பார்க்கலாம் வாங்க...
வெள்ளி மோதிரம் அணியும் முறை :
💍வெள்ளிக்கிழமை அன்று சுக்கிர ஓரையில் வெள்ளி மோதிரம் வாங்கி சந்தனமும், பன்னீரும் கலந்த நீரில் கழுவி இஷ்ட தெய்வம் அல்லது மகா லட்சுமியின் பாதத்தில் வைத்து அர்ச்சனை செய்த பின் அணிந்து கொள்ளவும்.
💍வெள்ளி மோதிரத்தை மோதிர விரல் அல்லது நடு விரல் அல்லது ஆள்காட்டி விரல் ஆகிய விரல்களில் அணிந்து கொள்ளலாம்.
💍அதாவது மேஷம், சிம்மம், தனுசு ஆகிய நெருப்பு ராசியை சார்ந்த பெண்கள் மோதிர விரலிலும்,
💍ரிஷபம், கன்னி, மகரம், கடகம், விருச்சிகம், மீனம் ஆகிய நில மற்றும் நீர் ராசியை சார்ந்தவர்கள் நடு விரலிலும்,
💍மிதுனம், துலாம், கும்பம் ஆகிய காற்று ராசியை சார்ந்தவர்கள் ஆள்காட்டி விரலிலும் வெள்ளி மோதிரத்தை அணிந்து கொள்ளலாம்.
💍இவ்வாறு வெள்ளி மோதிரம் அணிவதால் வெள்ளியிலிருந்து வெளிவரும் ஒரு சில மின் அலைகள் உடலில் இருக்கும் நரம்புகள் வழியே சென்று உடல் உள் உறுப்புகளுக்குள் இருக்கும் நோய்களை குணப்படுத்துகிறது.
💍வெள்ளி மோதிரம் அணிய விரும்பாதவர்கள் கழுத்தில் வெள்ளி செயின் அணிந்து கொள்ளலாம்.
பலன்கள்:
💫வெள்ளி மோதிரம் அணிவதால் அழகும், ஆளுமையும் அதிகரிக்கும்.
💫வெள்ளி மோதிரமானது சந்திரனின் தாக்கத்தை அதிகரிப்பதுடன் சளி மற்றும் இருமல் போன்றவற்றை சரிசெய்யவும் உதவுகிறது.
💫தம்பதிகளுக்குள் ஒற்றுமை ஏற்படவும், தொழில், வியாபாரம், மார்க்கெட்டிங் துறையில் உள்ளவர்கள் வாடிக்கையாளர்களை ஈர்க்கவும் வெள்ளி மோதிரத்தை அணியலாம்.
💫இதனால் வாழ்வில் செல்வ வளமும், அதிர்ஷ்டமும் பெருகும்.
💫இது கோபத்தை கட்டுப்படுத்தி சந்தோஷமாக வைத்திருக்க உதவும்.
💫கபம் என்று சொல்லப்படும் நீர் பூதத்தினால் ஏற்படும் நோய்களின் தாக்கத்தை இது குறைக்கிறது.
💫இது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுகிறது.
💫மூட்டு வலி, மனநிலை பாதிப்பு, மனக்குழப்பம் மற்றும் ஆர்த்ரைடிஸ் போன்ற நோயின் தீவிரம் குறைக்க இது உதவுகிறது.
Thanks and regards
A s Govinda rajan
andavar nagar second Street
Kodambakkam Chennai