வெனிசுலாவில் அமெரிக்க ஏகாதிபத்தியம் ஊடுருவியுள்ளது: கேரள முதல்-மந்திரி கண்டனம்

வெனிசுலாவில் அமெரிக்க ஏகாதிபத்தியம் ஊடுருவியுள்ளது: கேரள முதல்-மந்திரி கண்டனம்


 

திருவனந்தபுரம்,


வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ ஒரு போதை பொருள் பயங்கரவாதி என்றும் அந்நாட்டில் இருந்து அமெரிக்காவுக்குள் அபாயகர போதை பொருட்கள் கடத்தப்படுகின்றன என்றும் டிரம்ப் கடுமையான குற்றச்சாட்டுகளை கூறி வந்த நிலையில், நிக்கோலஸ் மதுரோவும், அவருடைய மனைவி சிலியா புளோரசும் அமெரிக்க ராணுவ வீரர்களால் கைது செய்யப்பட்டு வெனிசுலாவில் இருந்து நாடு கடத்தப்பட்டனர்.


இதனை தொடர்ந்து, நிக்கோலஸ், அவருடைய மனைவி புளோரஸ் மீது நியூயார்க் நகரில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு உள்ளது. அவர்கள் விரைவில் அமெரிக்க கோர்ட்டுகளில், அமெரிக்க மண்ணில், அமெரிக்க நீதியை பெறுவார்கள் என அமெரிக்க அட்டர்னி ஜெனரல் பமீலா போண்டி கூறினார்.


இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எனினும், வெனிசுலாவில் உள்ள எண்ணெய் மற்றும் பிற வளங்களை குறி வைத்து அமெரிக்கா இந்த நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளது என உலக நாடுகளால் பார்க்கப்படுகிறது.


இதற்கு, ரஷியா மற்றும் ஈரான் போன்ற நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளன. இந்திய அரசு இதற்கு கவலை தெரிவித்துள்ளது. நிலைமையை கவனித்து வருவதுடன், வெனிசுலா மக்களின் நலனுக்கான ஆதரவை மீண்டும் வலியுறுத்துகிறோம் என்றும் தெரிவித்து உள்ளது. சீனா, ஜப்பான் நாடுகளும், ஐ.நா. அமைப்பும் கூட வெனிசுலாவுக்கு ஆதரவாக பேசியுள்ளன.


இந்நிலையில், கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் இன்று கூறும்போது, அமெரிக்க அரசு ஏகாதிபத்திய ஆணவத்துடன் நடந்து கொள்கிறது. வெனிசுலாவின் பிராந்திய ஒருமைப்பாட்டை கவனத்தில் கொள்ளாமல் நடந்து கொண்டு, அதன் தலைவரை சிறைபிடித்து வைத்துள்ளது என குற்றச்சாட்டாக கூறினார்.


அமெரிக்க ராணுவ நடவடிக்கையானது, பிற நாடுகளில் அத்துமீறி தலையிடும் அதன் நீண்டகால வரலாற்றை பிரதிபலிக்கிறது. அமெரிக்காவின் பொருளாதார மற்றும் அரசியல் நலனிற்காக, அவற்றை பாதுகாப்பதற்காக, மோதல்களை உருவாக்கி, லட்சக்கணக்கான அப்பாவி மக்களை கடந்த காலங்களில் கொன்று குவித்துள்ளது என்றும் கூறியுள்ளார்.


கட்டு கட்டாக பணம் சிக்கிய விவகாரம்: நீதிபதி யஷ்வந்த் வர்மா மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு

 

புதுடெல்லி: டெல்லி உயர்​நீ​தி​மன்ற நீதிப​தி​யாக பணி​யாற்​றிய யஷ்வந்த் வர்மா வீட்​டில் கடந்​தாண்டு ஏற்​பட்ட தீ விபத்​தில் எரிந்த நிலை​யில் பண மூட்​டைகள் கைப்​பற்​றப்​பட்​டன. இந்த விவகாரத்தில் தனது பதவியை ராஜினாமா செய்ய நீதிபதி யஷ்வந்த் மறுத்துவிட்டார்.


இதையடுத்து மக்​களவை​யில் அவர் மீது பதவி நீக்க தீர்​மானம் கொண்​டு​வரப்​பட்டு 3 உறுப்​பினர் கொண்ட விசா​ரணை குழுவை சபா​நாயகர் ஓம் பிர்லா அமைத்​தார். இதே தீர்​மானம் மாநிலங்களவை​யில் நிராகரிக்​கப்​பட்​டது.


இந்நிலையில், சபா​நாயகரின் நடவடிக்​கையை எதிர்த்து உச்ச நீதி​மன்​றத்​தில் நீதிபதி யஸ்​வந்த் வர்மா மனுத்​ தாக்​கல் செய்​தார். அதில் விசா​ரணைக்கு குழு அமைத்​தது அரசி​யல்​ சாசனம் மற்​றும் நீதிப​தி​கள் விசா​ரணை சட்​டத்​துக்கு எதி​ரானது என கூறி சபா​நாயகரின் நடவடிக்​கையை ரத்து செய்​யும்​படி நீதிபதி வர்மா கூறியிருந்​தார்.


இந்த மனு மீதான விசா​ரணை நீதிப​தி​கள் திபாங்​கர் தத்தா மற்றும் எஸ்​சி.சர்மா ஆகியோர் அடங்​கிய அமர்​வில் நேற்று விசாரணைக்கு வந்​தது.


நீதிபதி யஷ்வந்த் வர்மா சார்​பில் மூத்த வழக்​கறிஞர்​கள் முகுல் ரோத்​தகி, சித்​தார்த் லுத்ரா ஆஜராயினர். மத்​திய அரசின் சார்​பில் சொலிசிடர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜரானார். இரு தரப்பு வாதங்​களை​யும் பதிவு செய்து கொண்​ட உச்​சநீதி​மன்​றம்​ தீர்ப்​பை மறு தேதி குறிப்​பி​டா​மல்​ ஒத்​தி வைத்​தது.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%