
108 ஆம்புலன்ஸ் ஊழியர்களை
தாக்கினால் இனி பத்து ஆண்டுகள்
சிறை தண்டனை வழங்கப்படும்.
உடல் உறுப்புகளை திருடுவதை
தனி தடுக்க தனிப்பட அமைப்பு.
இஞ்சியின் மருத்துவ பயன்கள்
வியக்க வைத்தது. சென்னையில்
100 பெண்களுக்கு பிங்க் கலர்
ஆட்டோக்களை உதயநிதி
வழங்கினார்.110 ஆண்டுகள்
பழமையான பாம்பன் பாலத்தை
இடிக்கும் பணிகள் தொடங்கியது.
சின்னஞ்சிறு கோபு அவர்கள்
எழுதிய போஸ்ட் ஆபீஸ் ஸ்டாம்ப்
மற்றும் 105 கிராம் காரச்சேவு
ஆகிய இரண்டு கவிதைகளும்
கனஜோராக இருந்தது. 372
ஆண்டுகள் பழமையான
செப்பேடுகள் கண்டுபிடிக்கப்பட்டது.
70 அடி ஆழத்தில் உள்ள சங்கு
சிவராத்திரி அன்று மட்டும்
வெளிப்படுகிறது. நாட்டில்
முதன்முறையாக ஹைட்ரஜன் ரயில்
ஹரியானாவில் ஓடத் தொடங்கியது.
சுதர்சன் ரெட்டி தீர்ப்பு குறித்து
பாஜக விமர்சனம். கோவை ரயிலில்
30 கிலோ கஞ்சா பறிமுதல்.
ஏமன் மீது இஸ்ரேல் அதிரடி
தாக்குதல். நைஜீரியாவில்
35 பயங்கரவாதிகள் பலி.
புதுக்கவிதைகள் கட்டுரைகள்
அனைத்தும் அட்டகாசமாக
இருந்தது பாராட்டத்தக்கது.
உள்ளூர் செய்திகள் முதல்
உலக செய்திகள் வரை விரைவாக
தமிழ்நாடு இ பேப்பர் வழங்கி வருவது
பாராட்டத்தக்கது. தமிழ்நாடு
இ பேப்பர் குடும்பத்திற்கு
வாழ்த்துக்கள். மேலும் நாம்
தெய்வம் இதழுக்கு சந்தா கட்டி
ஆன்மீகத்தை பின்பற்ற வேண்டும்
வருங்காலத்தில் ஆன்மீகம் ஒன்றே
சிறப்பான தீர்வாக இருக்கும்
என்பதில் ஐயமில்லை.
ஆன்மீகத்தை கடைப்பிடித்தால்
நாட்டில் சண்டை சச்சரவுகளுக்கு
இடமில்லை. உலகம் எங்கும்
போர் இல்லாத அமைதியான
வாழ்க்கையை வாழலாம்
மீண்டும் நாளை சந்திப்போம்
நடேஷ் கன்னா
கல்லிடைக்குறிச்சி
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?