முதல் காலாண்டு நிதிநிலை அறிக்கை: இந்தியன் வங்கியின் நிகர லாபம் ரூ.2,973 கோடியாக உயர்வு

முதல் காலாண்டு நிதிநிலை அறிக்கை: இந்தியன் வங்கியின் நிகர லாபம் ரூ.2,973 கோடியாக உயர்வு

செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த இந்தியன் வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி பினோத்குமார். உடன் நிர்வாக இயக்குநர்கள் அசுதோஷ் சவுத்ரி, பிரஜேஷ் குமார் சிங். படம்: ம.பிரபு

சென்னை: இந்​தி​யன் வங்​கி​யின் 2025-ம் ஆண்​டின் ஏப்​ரல் முதல் ஜூன் வரையி​லான முதல் காலாண்டு நிதி​நிலை அறிக்​கை, சென்னை ராயப்​பேட்​டை​யில் உள்ள வங்​கி​யின் தலை​மையகத்​தில் நேற்று வெளி​யிடப்​பட்​டது.


பின்​னர், வங்கி மேலாண்மை இயக்​குநரும், தலை​மைச் செயல் அதி​காரி​யு​மான பினோத் குமார் செய்​தி​யாளர்​களிடம் கூறியது: 2025-ம் ஆண்​டில் ஏப்​ரல் முதல் ஜூன் வரை முடிந்த முதலா​வது காலாண்​டில், இந்​தி​யன் வங்​கி​யின் நிகர லாபம் 23.69 சதவீதம் வளர்ச்​சி​யடைந்​து, ரூ.2,973 கோடி​யாக உயர்ந்​துள்​ளது. கடந்த 2024-ல் முதலா​வது காலாண்​டில் நிகர லாபம் ரூ.2,403 கோடியாக இருந்தது.


வங்​கி​யின் செயல்​பாட்டு லாபம் 2024-ல் முதல் காலாண்​டுடன் ஒப்​பிடும் போது, ரூ.4.502 கோடி​யில் இருந்து ரூ.4,770 கோடி​யாக உயர்ந்​துள்​ளது. இதன் மூல​மாக, செயல்​பாட்டு லாபம் 5.97 சதவீத​மாக வளர்ச்​சி​யடைந்​துள்​ளது.


வங்​கி​யின் நிகர வட்டி வரு​வாய் 2024-ல் முதல் காலாண்​டுடன் ஒப்​பிடும்​போது, ரூ.6,359 கோடி​யாக உயர்ந்​துள்​ளது. அதாவது, 2.93 சதவீதம் வளர்ச்சி அடைந்​துள்​ளது. சொத்​துகள் மீதான லாபமீட்​டல் நிலை 1.34 சதவீத​மாக​வும், பங்​கு​கள் மீதான லாபமீட்​டல் நிலை 20.26 சதவீத​மாக​வும் வளர்ச்சி அடைந்​துள்​ளது.


கடன்​கள் மீதான வரு​வாய் 8.58 சதவீத​மாக​வும், முதலீடு​கள் மீதான வரு​வாய் 6.96 சதவீத​மாக​வும் உள்​ளது. மொத்த கடன்​கள் 2024-ல் முதல் காலாண்​டுடன் ஒப்​பிடும் போது, இந்த காலாண்​டில் 11.50 சதவீதம் வளர்ச்சி பெற்​று, ரூ.6.01 லட்​சம் கோடி​யாக அதி​கரித்​துள்​ளது. சில்​லறை, விவ​சா​யம், குறு, சிறு, நடுத்தர துறை ஆகிய​வற்​றுக்கு வழங்​கப்​பட்ட கடன்​கள் ரூ.3.63 லட்​சம் கோடி​யாக உயர்ந்​து, 15.93 சதவீதம் வளர்ச்​சியை பதிவு செய்​துள்​ளது.


வங்​கி​யின் மொத்த வைப்​பு​கள் 2024-ல் முதல் காலாண்​டுடன் ஒப்​பிடும் போது, இந்​தக் காலாண்​டில் ரூ.7.44 லட்​சம் கோடி என்ற அளவை எட்​டி​யுள்​ளது. இதன் மூலம், 9.26 சதவீதம் வளர்ச்​சி​யடைந்​துள்​ளது.


மொத்த வாராக் கடன்​கள் முந்​தைய ஆண்​டுடன் (3.77 சதவீதம்) ஒப்​பிடும் போது, இந்த காலாண்​டில் அடிப்​படை புள்​ளி​கள் 76 ஆக குறைந்​து, 3.01 சதவீத​மாக பதி​வாகி​யிருந்​தது. இது​போல, நிகர வாராக்​கடன்​கள் கடந்த ஆண்​டின் முதல் காலாண்​டுடன் ஒப்​பிடு​கை​யில், இந்த காலாண்​டில் 0.39 சதவீதத்​தில் இருந்து 0.18 சதவீத​மாக பதி​வாகி இருந்​தது.


குறைந்​த​பட்ச இருப்பு நீக்​கம்: இந்​தி​யன் வங்​கி​யின் சார்​பில், இந்த ஆண்டு தமிழகத்​தில் 10 புதிய வங்கி கிளை​கள் திறக்கப்பட்டுள்​ளன. இதில், மூத்த குடிமக்​களுக்​காக சென்னை அடை​யாறில் ஒரு வங்கி கிளை திறக்​கப்​பட்​டுள்​ளது. வங்​கி​யின் குறைந்​த​பட்ச இருப்​புத் தொகை அண்​மை​யில் தள்​ளு​படி செய்​யப்​பட்​டுள்​ளது.


அதாவது, குறைந்த பட்ச இருப்பு இல்​லாதவர்​களுக்கு விதிக்​கப்​பட்ட அபராதம் நீக்​கப்​பட்​டுள்​ளது. பார்​வைத் திறனற்​றோர்​களுக்கு பிரெய்லி ஏடிஎம் கார்டு மற்​றும் குரல் மூலம் செயல்​படும் சிறப்பு செயலி உரு​வாக்​கப்​பட்​டுள்​ளது. இவ்​வாறு அவர் கூறி​னார். பேட்டி​யின் போது, வங்​கி​யின் செயல் இயக்​குநர்​கள்​ அசுதோஷ் சவுத்​ரி, பிரஜேஷ் குமார்​ சிங்​ உடன்​ இருந்​தனர்​.





Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%