news Breaking News
clock

மழையின் மனசு.

மழையின் மனசு.



மழை பெய்கிறது

நனைகிறது எல்லாமும்

அரளிச்செடி

ரோஜா செடி என

எல்லாவற்றின் மீதும் பெய்கிறது...


நல்லவர்

கெட்டவர் என

பாகுபாடு காட்டாது.


அன்பும்

கருணையும் கூட

அப்படித்தான்

அவைகளுக்கு 

பாகுபாடு தெரியாது.

எல்லோரையும்

நனைய வைக்கும்.


நி(ந)னைக்கவும்

மாந்தரில்

பாகுபாடு என்கிற

களையை எடுக்கவும்-நீர்

அடிக்கடி வரவும் மழையே!...


எறும்பூர் கை. செல்வகுமார், செய்யாறு.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News