பி.எம். கிசான் லிங்க்-இல் நுழைந்ததால் ரூ.10 லட்சம் மாயம்

பி.எம். கிசான் லிங்க்-இல் நுழைந்ததால் ரூ.10 லட்சம் மாயம்



விருதுநகர்: விருதுநகரைச் சேர்ந்த பாஜக நிர்வாகி யின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.10 லட்சம் சைபர் மோ சடியில் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்து விசா ரணை நடத்தி வருகின்றனர். ரோசல்பட்டி ஊராட்சி பாண்டியன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராமதாஸ் (47). இவர் விருதுநகர் கிழக்கு மாவட்ட பாஜக துணைத் தலைவராக உள்ளார். இவரது கைப்பேசி எண்ணிற்கு “பிஎம் கிசான்” என்ற பெயரில் ஒரு லிங்க் அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது. அரசுத் திட்டம் என தவறாக கருதிய அவர் அதில் நுழைந்துள்ளார். அதைத் தொடர்ந்து சில நிமிடங்களில் அவரது வங்கிக் கணக்கில் இருந்து ரூ.1 லட்சம், ரூ.4 லட்சம், ரூ.5 லட்சம் என மொத்தம் ரூ.10 லட்சம் பணம் எடுக்கப்பட்டதாக குறுஞ் செய்திகள் அவரின் கைப்பேசிக்கு வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த ராமதாஸ் உடனே விருதுநகர் சைபர் கிரைம் பிரிவில் புகார் அளித்தார். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், ராம தாஸ் பாஜக நிர்வாகியாக இருப்பதை அறிந்தே சைபர் குற்ற வாளி பி.எம்.கிசான் பெயரில் போலி லிங்கை அனுப்பி யுள்ளார். அவர் அதில் உள்நுழைந்ததைத் தொடர்ந்து, அவரது வங்கி விவரங்கள் திருடப்பட்டு பணம் பறிக்கப்பட்டது தெரிய வந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக பீகாரைச் சேர்ந்த ஒருவரை குற்றவாளியாகக் குறிப்பிட்டு, சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%