பிஹாரில் வளர்ப்பு நாய்க்கு குடியிருப்பு சான்றிதழ்

பிஹாரில் வளர்ப்பு நாய்க்கு குடியிருப்பு சான்றிதழ்

புதுடெல்லி:

பிஹார் சட்​டப்​பேர​வைத் தேர்​தலை முன்னிட்டு வாக்​காளர் பட்​டியலில் சிறப்பு திருத்​தப் பணி மேற்கொள்ளப்படுகிறது. இதன்​படி 2003-ம் ஆண்​டுக்கு பிறகு வாக்​காள​ராக பதிவு செய்து கொண்​ட​வர்​கள், தாங்​கள் இந்​திய குடிமகன் என்​பதை நிரூபிக்க பிறப்பு சான்​று, பாஸ்​போர்ட், குடி​யிருப்பு சான்று போன்ற கூடு​தல் ஆவணங்​களை சமர்ப்​பிக்க வேண்​டிய கட்​டா​யம் எழுந்​து உள்​ளது.


இந்த சூழலில் பிஹார் தலைநகர் பாட்​னா​வின் சவுரி பகு​தி​யில் ‘டாக் பாபு' என்ற பெயரில் வளர்ப்பு நாய்க்கு குடி​யிருப்பு சான்றிதழ் வழங்​கப்​பட்டு உள்​ளது. டாக் பாபு​வின் தந்தை பெயர் குடா பாபு, தாயின் பெயர் குடி தேவி என்று சான்​றிதழில் குறிப் பிடப்​பட்டு உள்​ளது.


இந்த சான்​றிதழில் பிஹார் வரு​வாய் துறை அதி​காரி முராரி சவு​கான் கையெழுத்​திட்டு உள்​ளார். அரசு அலு​வல​கத்​தின் கவுன்ட்டர் மூல​மாக நேரடி​யாக வழங்​கப்​பட்​டுள்ள சான்​றிதழில் நாயின் புகைப்​பட​மும் அச்​சிடப்​பட்டு உள்​ளது.


இந்த குடி​யிருப்பு சான்​றிதழ் சமூக வலை​தளங்​களில் வெளி​யாகி, வைரலாக பரவி வரு​கிறது. இதைத் தொடர்ந்து நாய்க்கு வழங்​கப்​பட்ட குடி​யிருப்பு சான்​றிதழை பிஹார் வரு​வாய் துறை நேற்று ரத்து செய்​தது.


மேலும் நாயின் பெயரில் விண்​ணப்​பத்தை சமர்ப்​பித்த நபர் யார் என்​பது குறித்து தீவிர விசா​ரணை நடத்​தப்​படு​கிறது. தவறிழைத்த அரசு அலு​வலர்​கள் மீது துறை ரீ​தி​யாக நடவடிக்கை எடுக்​கப்​படும் என்று வரு​வாய் துறை தெரி​வித்​துள்​ளது.




Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%