
பிரான்ஸ் நாட்டின் அக்ஸ் அன் ப்ரொவேன்ஸ் நகரில், கடந்த 19-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை ‘டோல் டிராபி மாஸ்டர்ஸ் 2025 ’ எனும் சர்வதேச செஸ் போட்டி நடைபெற்றது.
9 சுற்றுகளாக நடைபெற்ற இப்போட்டியில் 6 வெற்றி, 3 டிரா என 7.5 புள்ளிகளுடன் இந்திய கிராண்ட் மாஸ்டர் இனியன் முதல் இடத்தைப் பெற்று, போலாந்தின் மலேக் ஜான் உடன் சமன் செய்தார்.
வெற்றியாளரை நிர்ணயம் செய்ய நடைபெற்ற முதல் ரேபிட் போட்டி டிரா ஆனது. அடுத்து நடைபெற்ற 2-வது ரேபிட் போட்டியில் இனியன், 1.5 - 0.5 புள்ளிகளுடன் முதல் இடத்தை பிடித்து சாம்பியன் பட்டம் வென்றார்.
ஆக.11-ல் பள்ளிகளுக்கு இடையிலான வாலிபால் சாம்பியன்ஷிப்: சென்னை மாவட்ட சிறுவர், சிறுமியர்களுக்கான பள்ளிகளுக்கு இடையேயான வாலிபால் சாம்பியன்ஷிப் வரும் ஆகஸ்ட் 11 முதல் 13-ம் தேதி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டரங்கில் நடைபெற உள்ளது. இந்த போட்டியை சென்னை மாவட்ட வாலிபால் சங்கம், சேன் அகாடமி பள்ளிகள் குழுமத்துடன் இணைந்து நடத்துகிறது.
போட்டியில் பங்கேற்க விரும்பும் அணிகள் வரும் 6-ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும். மேலும் விவரங்களுக்கு 9444842628, 9841816778 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?