செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
பல்லி அரசு மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா:
Dec 09 2025
32
செய்யாறு டிச.10,
செய்யாறு அடுத்த பல்லி அரசு மேல்நிலைப் பள்ளியில் விலை இல்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு எம்எல்ஏ ஒ. ஜோதி தலைமை தாங்கி மாணவர்களுக்கு விலை இல்லா மிதிவண்டிகளை வழங்கினார். தலைமை ஆசிரியர் சங்கர் முன்னிலை வகித்தார். ஒன்றிய செயலாளர் ஏ. ஞானவேல் வரவேற்றார்.
வெம்பாக்கம் மத்திய ஒன்றிய செயலாளர் ஜெ சி கே .சீனிவாசன், இலக்கிய அணி மணிவண்ணன் ,சேகர் ,தொண்டரணி அமைப்பாளர் ராம்ரவி,அவைதலைவர் தயாளன், மற்றும் ஞானமுருகன் ,சுந்தரேசன், மகராசன், ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%