நீரில் மூழ்கிய பயிர்களை பாதுகாக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள்
Dec 06 2025
16
நீரில் மூழ்கிய பயிர்களை பாதுகாக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள்
காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி விளக்கம்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் டிட்வா புயல் காரணமாக நீரில் மூழ்கியுள்ள பயிர்களைப் பாதுகாத்திட எடுக்கப்பட வேண்டிய பயிர் மேலாண்மை மற்றும் பயிர்பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து கலெக்டர் கலைச்செல்வி மோகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
டிட்வா புயல் காரணமாக ஏற்பட்ட கனமழையின் காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் சம்பா பருவத்தில் பயிரிடப்பட்டுள்ள சுமார் 250 ஏக்கர் நெற்பயிர் நீரில் மூழ்கியுள்ளதாக முதற்கட்ட அறிக்கை வாயிலாக அறியப்படுகிறது. முதலமைச்சர் உத்தரவுப்படி, பாதிக்கப்பட்டுள்ள நெல்வயல்களில் ஏற்பட்டுள்ள சேதங்களைக் கண்காணித்திட கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. வேளாண்மைத்துறை அலுவலர்களால் வருவாய்த்துறையுடன் இணைந்து வயல் ஆய்வு மூலம் 33 சதவீதத்திற்கு மேல் ஏற்படும் பயிர் பாதிப்பைக் கணக்கீடு செய்து நிவாரணம் வழங்கிட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
மேலும், நீரில் மூழ்கியுள்ள பயிர்களைப் பாதுகாத்திட எடுக்கப்பட வேண்டிய பயிர் மேலாண்மை மற்றும் ஒருங்கிணைந்த முறையில் பயிர் பாதுகாப்பு நடவடிக்கைகள் பல்வேறு ஊடகங்கள் வாயிலாக விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. எனவே, விவசாயிகள் சாகுபடி செய்யப்பட்ட பயிர்களைச் சுற்றி தேங்கியுள்ள அதிகப்படியான நீரினை வடிகால் அமைத்து உடனடியாக வடித்து விட வேண்டும். மழைக்காலங்களில் உரம் இடுதல், பூச்சி மருந்து தெளித்தல், களைக்கொல்லி இடுதல் போன்றவற்றைத் தவிர்த்திட வேண்டும். பூச்சி நோய் தாக்குதலைத் தொடர்ந்து கண்காணித்து பொருளாதார சேத நிலைக்கு மேல் இருந்தால் பயிர்பாதுகாப்பு நடவடிக்கைள் மேற்கொள்ள வேண்டும்.
வடகிழக்கு பருவமழை தொடர்ந்து டிசம்பர் மாத இறுதி வரை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் அவ்வப்போது ஏற்படும் பயிர் பாதிப்பு நில விவரங்களை வட்டார வேளாண்மை அலுவலர்களுக்குத் தெரிவித்து உரிய ஆலோசனைகளை பெற்று பயிர் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். சூரிய சக்தியினால் இயங்கும் பம்ப்செட்டுகளில் சோலார் பேனல்கள் அகற்றப்பட அல்லது அதன் சாய்வு கோணத்தினை 0 டிகிரி ஆக மாற்றி வைக்க வேண்டும். சூரிய சக்தி மின் வேலி அமைப்பின் சுவிட்சினை நிறுத்தி வைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?