news Breaking News
clock

திருவொற்றியூர் நியாய விலை கடைகளில் 3000 ரூபாய் ரொக்க பணத்துடன் பொங்கல் தொகுப்பு

திருவொற்றியூர் நியாய விலை கடைகளில் 3000 ரூபாய் ரொக்க பணத்துடன் பொங்கல் தொகுப்பு

திருவொற்றியூர் நியாய விலை கடைகளில் 3000 ரூபாய் ரொக்க பணத்துடன் பொங்கல் தொகுப்பு வழங்கிய திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர்



தமிழக அரசு அறிவித்த பொங்கல் பரிசு ரூ 3000 மற்றும் கரும்பு அரிசி சர்க்கரை புடவை வேஷ்டி உள்ளிட்ட பொங்கல் தொகுப்பினை தமிழக முதல்வர் இன்று காலை துவக்கி வைத்த நிலையில் திருவொற்றியூரில் சட்டமன்ற உறுப்பினர் கே.பி. சங்கர் எம். எல். ஏ திருவொற்றியூர் ஐந்தாவது வார்டுக்கு உட்பட்ட திருநகர் மாணிக்கம் நகர் சத்திய புரம் சின்ன எர்ணாவூர் விம்கோ நகர் உள்ளிட்ட நியாய விலை கடைகளுக்கு சென்று பொதுமக்களுக்கு வழங்கினார்



ஏற்கனவே நியாய விலை கடைகளில் டோக்கனை வீடு வீடாக சென்று கொடுத்த நிலையில் டோக்கன் பெற்றுக் கொண்டவர்கள் இன்று நியாய விலை கடைக்கு வந்து கரும்புடன் 3000 ரூபாய் பொங்கல் தொகுப்புகளுடன் வரிசையில் நின்று வாங்கிச் சென்றனர் இந்த நிகழ்ச்சியில் கவுன்சிலர் கே.பி. சொக்கலிங்கம், அயலஅணி மாவட்ட தலைவர் எஸ்.டி.சங்கர் உட்பட பலர் கலந்து கொண்டனர்

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News