திருமண நாள்

திருமண நாள்

கவிஞர் இரா .இரவி!


வாழ்வில் மறக்க முடியாத பொன்னாள்

வசந்தங்கள் அறிமுகம் ஆன நன்னாள் !


பலருக்கு பொறுப்பும் மகிழ்வும் தந்தது 

சிலருக்கு வருத்தமும் சோகமும் தந்தது !


இன்றுமுதல் இணையும் இணைகள் இவர்கள் 

என்று உலகிற்கு அறிவிக்கும் அற்புதநாள் !


ஒருவனுக்கு ஒருத்தி என்ற பண்பாட்டால் 

உலகமே வியந்து பாராட்டுது நம்மை !


இறுதிவரை இணைபிரியாது வாழ்வோர் பலர் 

இணையைப் பிடிக்காமல் பிரிந்து வாடுவோர் சிலர் !


ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து வாழ்ந்தால் 

ஒருபோதும் வராது சண்டை வழக்கு ஊடல் !


நான் என்ற அகந்தை யாருக்கு வந்தாலும்

நல்ல குடும்பம் சிந்தைந்துப் போகும் !


பொறுமை இழந்து கண்டபடி பேசியதால் 

பூமியில் இணைகள் பிரிந்து விடுகின்றனர் !


அன்பு செலுத்தி ஆனந்தமாய் வாழ்ந்தால் 

ஆயும் இருவருக்கும் நீளும் என்பது உண்மை !


மனைவியின் மனதை மதித்து நடந்தால் 

மனையில் இன்பம் பொங்கி வழியும் !


கணவன் மனதை புரிந்து நடந்தால் 

கடைசிவரை பிரியாது இணைந்து வாழலாம் !


எங்கிருந்தோ இங்கு வந்த மனைவியின் 

எண்ணம் அறிந்து கணவன் நடக்க வேண்டும் !


ஆணாதிக்கச் சிந்தனையை அகற்றி வாழ்ந்தால் 

அகமும் புறமும் வாழ்வு அன்பாய் அமையும் !


எடுத்து எரிந்து மனைவியைப் பேசியதால் 

இன்னலில் வாடி வதங்கும் கணவர் உளர் !


கணவனின் குணம் அறிந்து மனைவியும் 

கொஞ்சம் விட்டுக் கொடுத்தால் இனிக்கும் !


வசமாகும் வானம் மகிழ்வோடு வாழ்ந்தால் 

வருடா வருடம் கொண்டாடி மகிழும் திருநாள் !

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%