news Breaking News
clock

திருச்சிராப்பள்ளித் தமிழ்ச்சங்கம் குளிர்மை சிற்றரங்கில், " ராக்போர்ட் நண்பர்கள் நற்பணிமன்றம் டிரஸ்ட் சார்பில் 23ம் ஆண்டு பட்டிமன்றம் , கல்வி உதவித் தொகை" வழங்கும் நிகழ்ச்சி

திருச்சிராப்பள்ளித் தமிழ்ச்சங்கம் குளிர்மை சிற்றரங்கில், " ராக்போர்ட் நண்பர்கள் நற்பணிமன்றம் டிரஸ்ட் சார்பில் 23ம் ஆண்டு பட்டிமன்றம் , கல்வி உதவித் தொகை" வழங்கும் நிகழ்ச்சி

திருச்சிராப்பள்ளித் தமிழ்ச்சங்கம் குளிர்மை சிற்றரங்கில், " ராக்போர்ட் நண்பர்கள் நற்பணிமன்றம் டிரஸ்ட் சார்பில் 23ம் ஆண்டு பட்டிமன்றம் , கல்வி உதவித் தொகை" வழங்கும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் (06.09.25) நடைபெற்றது.


     " வாழ்வின் முன்னேற்றத்துக்கு பெரிதும் உதவுவது உறவுகளா! நட்புகளா! " என்ற தலைப்பில், தஞ்சை தாமு நடுவராக வீற்றிருக்க,


     உறவுகளே என்ற அணியில் :

திருக்குறள் ராணி மங்களமேரி

நாவரசு மோ கோபால்சாமியும்,


நட்புகளே என்ற அணியில் :


ஆய்வுரைத் திலகம் ஜெயலட்சுமி

மேடைப்புயல் சுஜாதா சஞ்சய் குமாரும் பேசினர்.

      

    முன்னதாக தமிழ்ச் செம்மல் வீ.கோவிந்தசாமி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், வி.ஜி.பி நிறுவன வீட்டுவசதிப் பிரிவு மேனாள் துணைத்தலைவர் இரா.தங்கையா, ரயில்வே பென்சனர் சங்கத்தலைவர் திரு. T.S. கணேஷ், ஆடிட்டர் S..A. முருகையன் ஆகியோர் முன்னிலை வகிக்க , இயக்கத்தின் நிறுவனத் தலைவர் உறந்தை மு.பிச்சையா வரவேற்புரை நல்க, கவிஞர் சுமித்ராதேவி மாதவன் வாழ்த்துரை வழங்கினார்.

     

       நிகழ்ச்சியை பன்முகத் கலைஞர் லால்குடி முருகானந்தம் தொகுத்து வழங்க, இயக்கத்தின் பொருளாளர் திரு.ரவிக்குமார் நன்றி கூறினார்.


      தமிழவேள் பெ.உதயகுமார் தமிழ்ச்சங்க அமைச்சர், திரு.நன்மாறன் , திரு.க. சுரேஷ்குமார் (23 வது வார்டு மாமன்ற உறுப்பினர்) திரு. J.J. பிரபு, திரு. வைகுண்ட மூர்த்தி உள்ளிட்ட பலர் பங்கேற்று சிறப்பித்தனர்.


ஸ்ரீகாந்த் திருச்சி

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News