தமிழகத்துக்கு ரூ.2,152 கோடி நிதியை உடனே விடுவிக்க வேண்டும்: பிரதமரிடம் முதல்வர் சார்பில் அமைச்சர் தங்கம் தென்னரசு மனு

தமிழகத்துக்கு ரூ.2,152 கோடி நிதியை உடனே விடுவிக்க வேண்டும்: பிரதமரிடம் முதல்வர் சார்பில் அமைச்சர் தங்கம் தென்னரசு மனு

திருச்சி:

தமிழகத்​துக்கு நிபந்​தனை​யின்றி ரூ.2,152 கோடி நிதியை உடனே விடுவிக்க வேண்​டும் என்பது உள்​ளிட்ட கோரிக்கைகளை வலி​யுறுத்​தி, தமிழக முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் சார்​பில் பிரதமர் மோடி​யிடம் அமைச்​சர் தங்​கம் தென்​னரசு மனு வழங்​கி​னார். திருச்​சிக்கு நேற்று முன்​தினம் இரவு வந்த பிரதமர் மோடி​யிடம், முதல்​வர் சார்​பில் கோரிக்கை மனுவை தமிழக நிதியமைச்​சர் தங்​கம் தென்​னரசு வழங்​கி​னார்.


அதில் கூறி​யிருப்​ப​தாவது: சமக்ரா சிக் ஷா திட்​டத்​தின் கீழ் தமிழக அரசுக்கு மத்​திய அரசு நிதி வழங்​காமல் இருப்​ப​தால் லட்சக்கணக்​கான மாணவ, மாணவி​களின் எதிர்​காலம் பாதிக்​கப்​பட்டு வரு​கிறது. எனவே, 2024-25-ம் நிதி​யாண்​டுக்கு நிலு​வை​யில் உள்ள ரூ.2,151.59 கோடியை​யும், 2025-26-ம் ஆண்​டுக்​கான முதல் தவணை நிதி​யை​யும், பிஎம்ஸ்ரீ புரிந்​துணர்வு ஒப்​பந்​தத்​தில் கையெழுத்​திட வேண்​டுமென நிபந்​தனை விதிக்​காமல் விரைந்து வழங்க வேண்​டும்.


10 ஆண்​டு​களுக்கு முன்பு அனு​ம​திக்​கப்​பட்டு செயல்​படுத்​தப்​ப​டா​மல் உள்ள திண்​டிவனம்​-செஞ்சி -திரு​வண்​ணா​மலை, ஈரோடு பழனி, அருப்​புக்​கோட்டை வழி​யாக மதுரை- தூத்​துக்​குடி, அத்​திப்​பட்​டு- புத்​தூர், மகாபலிபுரம் வழி​யாக சென்​னை-கடலூர் ஆகிய ரயில் பாதை திட்​டங்​களை செயல்​படுத்த நடவடிக்கை எடுக்க வேண்​டும்.


திரு​வனந்​த​புரம் - கன்​னி​யாகுமரி இரட்டை பாதை பணியை துரிதப்​படுத்​த​வும், திருப்​பத்​தூர்-கிருஷ்ணகிரி ஓசூர் புதிய பாதைக்கு ஒப்​புதல் அளிக்​க​வும், கோவை- பல்​லடம்- கரூர், கோவை-கோபி-ப​வானி- சேலம், மதுரை-மேலூர்- துவரங்​குறிச்​சி-விராலிமலை- இனாம்​குளத்​தூர் மற்​றும் மதுரை நகரைச் சுற்றி புறநகர் ரயில் ஆகிய திட்​டங்​களுக்கு விரி​வான திட்ட அறிக்கை தயாரிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்​டும்.


சென்​னை​யில் புறநகர் ரயில் சேவை​களை உச்ச நேரங்​களில் இயக்க இடைவெளி நேரத்தை குறைக்​க​வும், குளிர்​சாதன மற்​றும் குளிர்​சாதன வசதி இல்​லாத மின்​சார ரயில் பெட்​டிகளை (EMU) கூடு​தலாக ஒதுக்​கீடு செய்​ய​வும், தாம்​பரம்- செங்​கல்​பட்டு 4-வது வழித்​தடத்தை செயல்​படுத்​த​வும், ஆவடி - ஸ்ரீபெரும்​புதூர் ரயில் பாதை திட்​டத்தை விரை​வாக செயல்​படுத்​த​வும் நடவடிக்கை எடுக்க வேண்​டும்.


கோவை மெட்ரோ ரயில் திட்​டத்தை (34.8 கி.மீ) ரூ.10,740.49 கோடி​யிலும், மதுரை மெட்ரோ ரயில் திட்​டத்​தை(32 கி.மீ) ரூ.11,368.35 கோடியிலும் மேற்​கொள்ள தமிழக அரசு திட்ட மதிப்​பீடு தயாரித்து ஒப்​புதல் அளித்​துள்​ளது. மெட்ரோ ரயில் கொள்​கை​யின்​படி மத்திய அரசும், தமிழக அரசும் 50:50 என்ற சம பங்​களிப்பு அடிப்​படை​யில் நிதியை விரைந்து வழங்க ஆவன செய்ய வேண்​டும்.


இந்​திய மீனவர்​களின் பாரம்​பரிய மீன்​பிடி உரிமை​களைப் பாது​காப்​ப​தற்​கும், கைது செய்​யப்​பட்ட மீனவர்​கள் மற்​றும் அவர்களின் படகு​களை விரை​வாக விடுவிக்​க​வும் நிரந்​தரத் தீர்வு காண வேண்​டும். 1971-1975-ல் சேலத்​தில் உருக்​காலை அமைக்க 3,973.08 ஏக்​கர் நிலத்தை தமிழக அரசு வழங்​கியது.


இதில் 1,503.44 ஏக்​கர் நிலம் இன்​னும் பயன்​படுத்​தப்​ப​டா​மல் உள்​ளது. இந்த நிலத்தை பாது​காப்​புத் தொழில் பெரு​வழிச் சாலை அமைக்​கும் திட்​டத்தை நிறு​வுவதற்கு ஏது​வாக திரும்ப வழங்க நடவடிக்கை எடுக்க வேண்​டும். இவ்​வாறு மனு​வில் கூறப்பட்டுள்ளது.


முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் நேற்று தனது சமூக வலைத்​தளப் பதி​வில், “தமிழக மாணவர்​களின் கல்விக்​கான நிதி, ரயில் திட்​டங்​கள், மீனவர்​களின் வாழ்​வா​தா​ரம், சேலம் பாது​காப்​புத் தொழிற்​பூங்கா ஆகிய​வற்றை வலி​யுறுத்தி பிரதமர் மோடி​யிடம் கோரிக்கை மனு அளித்​துள்​ளோம். மக்​களின் உணர்​வு​களுக்​கும் மாநிலத்​தின் வளர்ச்​சிக்​கும் மதிப்​பளித்​து உரிய தீர்​வை பிரதமர்​ வழங்​கு​வார் என்​று நம்​பு​கிறேன்​” என்​று தெரிவித்​துள்​ளார்​.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%