தங்கம் கடத்திய வழக்கில் நடிகை ர‌ன்யா ராவுக்கு ரூ.102 கோடி அபராதம்: வருவாய் புலனாய்வு இயக்குநரகம் உத்தரவு

தங்கம் கடத்திய வழக்கில் நடிகை ர‌ன்யா ராவுக்கு ரூ.102 கோடி அபராதம்: வருவாய் புலனாய்வு இயக்குநரகம் உத்தரவு

பெங்களூரு:

கர்​நாடக போலீஸ் டிஜிபி ராமசந்​திர ராவின் வளர்ப்பு மகளும், நடிகை​யு​மான‌ ரன்யா ராவ் (32), துபா​யில் இருந்து 14.8 கிலோ தங்​கம் கடத்தி வந்​த​தாக‌ கடந்த மார்ச்​சில் பெங்​களூரு விமான நிலை​யத்​தில் கைது செய்​யப்​பட்​டார். அவரது வீட்​டில் நடத்​திய சோதனை​யில் ரூ. 2.8 கோடி மதிப்​பிலான தங்​க​மும், ரூ.2.4 கோடி ரொக்​க​மும் சிக்​கியது. இவ்​வழக்​கில் ரன்யா ராவுக்கு பெங்​களூரு சிறப்பு நீதி​மன்​றம் கடந்த ஜூலை​யில் ஓராண்டு சிறை தண்​டனை விதித்து உத்​தர​விட்​டது.


இதனிடையே ரன்யா ராவிடம் டிஆர்ஐ அதி​காரி​கள் நடத்​திய விசா​ரணை​யில் அவர் 46 முறை துபாய், ஆப்​பிரிக்கா போன்ற வெளி​நாடு​களுக்கு சென்​றது தெரிய​வந்​தது.


இதில் 27 முறை துபாய்க்கு மட்​டும் சென்று தங்​கம் கடத்தி வந்​ததும் கண்​டறியப்​பட்​டது. அவரிடம் இருந்து தங்​கத்தை வாங்​கிய தெலுங்கு நடிகரும் ரன்​யா​வின் நண்​பரு​மான தருண் ராஜு, நகைக் கடை அதிபர் ஷாகில்ஜெயின், தொழில​திபர் பரத் ஜெயின் ஆகியோ​ரும் சிக்​கினர்.


இதையடுத்து ரன்யா ராவ் உள்​ளிட்ட நால்​வர் மீதும் அந்​நியச் செலா​வணி பாது​காப்பு மற்​றும் கடத்​தல் நடவடிக்கை தடுப்பு சட்​டத்​தின் கீழ் வழக்கு பதிவு செய்​யப்​பட்​டது. இந்த நால்​வரும் 127.3 கிலோ தங்​கம் கடத்தி வந்​தது உறு​தி​யானதை தொடர்ந்து ரன்யா ராவுக்கு ரூ.102 கோடி அபராதம் விதிக்​கப்​பட்​டது.


கூட்​டாளி​களுக்​கும் அபராதம்: மேலும் சட்ட விரோத​மாக 72.6 கிலோ தங்​கம் கடத்​தி​ய​தாக தருண் ராஜுவுக்கு ரூ.62 கோடி​யும், 63.61 கிலோ தங்​கம் கடத்​திய ஷாகில் ஜெயின், பரத் ஜெயின் ஆகியோ​ருக்கு தலா ரூ.53 கோடி​யும் அபராதம் விதிக்​கப்​பட்​டுள்​ள​தாக டிஆர்ஐ தெரி​வித்​துள்​ள‌து. இந்த அபராத தொகையை 3 மாத‌ங்​களுக்​குள் செலுத்​தா​விடில் அவர்​களுக்கு சொந்​த​மான சொத்​துகள் பறி​முதல் செய்​யப்​படும்​ என டிஆர்​ஐ எச்​சரித்​துள்​ளது.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%