*பத்மசிறீ* என்கின்ற
பண்பு விருதினை
வித்தகமாய்ப் பெற்றாரே
வீறுடன்..பத்தித்
திரைப்படங்கள் கண்டார்
தெளிவாகத் தானே
உரைத்திடும் *சுப்பு*
உணர்!
வில்லுப்பாட் டின்நல்ல
வீறாம் இசையினை
வல்லமுறைப் பாடி
வளம்சேர்த்தார்..சொல்லிடும்
*கொத்தமங்க* *லம்சுப்பு*
கூர்மைத் தமிழாலே
முத்தமிழ் வல்லார் முனைந்து!
*முனைவர்*
*இராம.வேதநாயகம்*.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%