கூட்டணிக்காக யாரும் எங்களுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை’ - டி.டி.வி.தினகரன்
Dec 30 2025
14
திருச்சியில் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;- “கூட்டணிக்காக யாரும் எங்களுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை. அழுத்தம் கொடுத்து ஒரு தலைவரை வேண்டுமானால் வழிக்கு கொண்டு வர முடியும், ஆனால் தொண்டர்கள் கேட்பார்களா?
நாங்கள் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்தபோதும், அந்த கூட்டணியை விட்டு வெளியே வந்த பிறகும் சில கட்சிகள் எங்களை அணுகி, அவர்களது கூட்டணிக்கு வர வேண்டும் என்று பேசி வருவது உண்மைதான். கூட்டணி குறித்து இதுவரை நாங்கள் எந்த முடிவும் இதுவரை எடுக்கவில்லை. கூட்டணி பற்றிய முடிவு எடுக்கப்பட்ட பிறகு அது தொடர்பான அறிவிப்பை வெளியிடுவோம்.” இவ்வாறு அவர் தெரிவித்தார்.
எல்லோரும் எம்.ஜி.ஆர். ஆக முடியாது: விஜய் மீது செல்லூர் ராஜு சாடல்
செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கூறியதாவது;
"நாங்கள் களத்தில் இருக்கிறோமா இல்லையா என்பதை மக்கள் முடிவு செய்வார்கள். எங்களை களத்தில் இல்லை என சொல்ல எவ்வளவு தைரியம். நாவை அடக்கி பேச வேண்டும். அதிமுக களத்தில் இல்லை என சொல்வது முட்டாள் தனம். விஜய் இதுவரை எத்தனை தேர்தல்களில் போட்டியிட்டுளார் ? அவருக்கு என்ன பின்புலம் ? . நடிகர்களுக்கு ரசிகர்கள் கூடுதலாக இருக்கலாம். ஆனால் எல்லோரும் எம்.ஜி.ஆர்.ஆக முடியாது. எம்.ஜி.ஆர். என்பவர் ஒருவர் தான்." என தெரிவித்தார்
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?